Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்க ரெடி.. நிவர் புயலை எதிர்கொள்ள சிதம்பரம், கடலூர் விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 6 குழுக்கள், சிதம்பரம் மற்றும் கடலூர் பகுதிகளுக்கு விரைந்துள்ளன.

நாளை மறுநாள் புதன்கிழமை பிற்பகலில், மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே நிவர் புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது அதி தீவிர புயலாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேக காற்றுடன் கரையை கடக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Cyclone Nivar: Six teams of NDRF leave for Cuddalore & Chidambaram towns

இந்த நிலையில், தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன. பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 6 குழுக்கள் சிதம்பரம் மற்றும் கடலூர் பகுதிகளுக்கு இன்று விரைந்துள்ளன. அவர்கள் அங்கு முன்கூட்டியே மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

ஒரு குழுவில் 20 வீரர்கள் வீதம், 120 வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.

Cyclone Nivar: Six teams of NDRF leave for Cuddalore & Chidambaram towns

புயல் கரையை கடக்கும்போது, பல்வேறு மாவட்டங்களிலும் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார். இருப்பினும், வெள்ள பாதிப்பு, கட்டிட இடிபாடுகள் போன்ற பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால், பேரிடர் மீட்புப் படையின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே சென்று அங்குள்ள நிலவரங்களை மீட்பு படையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதனிடையே, சென்னையில் தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+