Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ்சுக்கு அந்த விஷயத்தை நினைவுபடுத்துகிறேன்! ஜெயக்குமார் பதிலடி! அதிமுகவில் வலுக்கும் மோதல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை எதிர்த்துதான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார் என்பதை நினைவுப்படுத்த வேண்டியது எனது கடமை என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு செய்வர் என மதுரையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

D.Jayakumar gives suitable reply to OPS

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பட்டினம்பாக்கத்தில் டி ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது என ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது என கூறியவரே ஓபிஎஸ்தான். அது போல் அவருடன் அதிமுகவினர் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்றும் அவர்தான் கூறினார். அவ்வாறு தொடர்பு வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிகலாவையும் அவரை சார்ந்தவர்களையும் எதிர்த்துதானே ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். இதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது. சூரியன் திசைமாறி உதித்தாலும் சசிகலாவுடன் இணைந்து செயல்படமாட்டேன் என்றார் ஜெயக்குமார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+