ராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக விமர்சனம்.. பா.ரஞ்சித்துக்கு காங்கிரஸ் தலித் பிரிவு ஆதரவு
Recommended Video
சென்னை: சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்த இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு காங்கிரஸ் தலித் பிரிவு ஆதரவு தெரிவித்துள்ளது.
அட்டக்கத்தி படம் மூலம் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். மெட்ராஸ் படம் மூலம் வெற்றி இயக்குநராக தடம் பதித்த ரஞ்சித், ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து அவ்வப்போது ஜாதிக் குறித்து பேசி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய பா.ரஞ்சித் ராஜ ராஜ சோழனை கடுமையாக விமர்சித்தார்.

தரக்குறைவாக விமர்சனம்
ராஜ ராஜ சோழனை அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் பேசியதோடு, அயோக்கியன் என்றும் கூறினார். மேலும் 400 பெண்களை தேவதாசிகளாக வைத்திருந்தது ராஜ ராஜ சோழன்தான் என்றும் தரக்குறைவாக விமர்சித்தார்.

பாய்ந்த வழக்குகள்
அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட நகரங்களில் உள்ள காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பா.ரஞ்சித் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.

வரலாற்று உண்மை
இதைத்தொடர்ந்து நேற்று முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில் ராஜ ராஜ சோழன் குறித்து தான் பேசியது வரலாற்று உண்மை என்றும் ரஞ்சித் தெரிவித்திருந்தார். உமர் பாரூக்கின் செந்தமிழ்நாட்டு சேரிகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களையே தான் பேசியதாகவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
|
துணை நிற்கிறோம்
இந்நிலையில் இயக்குநர் பா ரஞ்சித்துக்கு காங்கிரஸின் தலித் பிரிவு ஆதரவு தெவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலித் பிரிவு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், பா.ரஞ்சித் உங்களின் சாதியத்துக்கு எதிரான போராட்டம் சிறப்பானது. நாங்கள் உங்களுக்கு ஆதரவாக துணை நிற்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications