லோக்சபா தேர்தல்.. முன்னணியில் திருமாவளவன்...! பின்னடைவில் டாக்டர் கிருஷ்ணசாமி..!
சென்னை:லோக்சபா தேர்தலில் தமிழக தலித் தலைவர்களான திருமாவளவன் முன்னணியிலும், டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவையும் சந்தித்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட நாடு முழுவதும் எதிர்பார்த்த மாதிரியே லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. மத்தியில் மீண்டும் பாஜக ஜம்மென்று அமர இருக்கிறது. அக்கட்சியின் தொண்டர்களும் உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்திலும் பெரியளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த தேர்தலில் தலித் தலைவர்களான திருமாவளவனும், டாக்டர் கிருஷ்ணசாமியும் களம் இறங்கினர். சிதம்பரத்தில் திருமாவளவனும், தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமியும் போட்டியிட்டனர்.
தேர்தல் முடிவுகள் வெளியான ஆரம்பம் முதலே... சிதம்பரத்தில் திருமாவளவன் பின்னடைவை சந்தித்தார். கிட்டத்தட்ட 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் அதிமுக வேட்பாளரைவிட பின் தங்கியிருந்தார். பின்னர் மீண்டும் முன்னிலை வகித்தார்.
செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!
அதே போன்று தென்காசியிலும்... ஆனால் வாக்கு வித்தியாசத்தில் மாறுபாடு இருக்கிறது. டாக்டர் கிருஷ்ணசாமி தொடக்கத்தில் முன்னிலை வகிப்பது போன்று தென்பட்டாலும், கிட்டத்தட்ட 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து இருக்கிறார். இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இறுதிக்கட்ட தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்.
போனவாட்டியும் இதே ரிசல்ட்.. இந்த முறையும் அதே முடிவு.. மக்கள் தீர்ப்பு விசித்திரமா இருக்கே!