“சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் தான் இந்த நிலை”.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
சென்னை: "சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் செருப்பு போட்டு செல்வதற்காகவும், இருசக்கர வாகனத்தில் சென்றதற்காகவும் தலித்துகள் தாக்கப்படுகின்றனர். வேங்கைவயலில் மனிதக்கழிவை குடிநீரில் கலந்த இழிவான சம்பவம் இங்கேதான் நடந்தது" எனப் பேசியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், "அம்பேத்கர் தலித் தலைவர் அல்ல, பாரதத் தாயின் மகன். மிகவும் உயர்ந்த, ஆளுமை நிறைந்த மனிதர் அம்பேத்கர். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவர். கடுமையான உழைப்பால் உயர்ந்தவர்.
அவர் வெறும் பட்டியலின மக்களுக்கு மட்டுமே தலைவர் இல்லை. அவர் பாரதியின் பெருமைக்குரிய மகனும் கூட. நமது பட்டியலின சகோதர, சகோதரிகள் இதுவரை வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தபட்டு வருகின்றனர்.அம்பேத்கர் கண்ட கனவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் சமூக நீதிக்கான அவரது கனவு, சமூக நீதிக்கான குரல் அதிகமாக கேட்கும் தமிழ்நாட்டில் நிறைவேறாமல் போனது. தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தலித்துகள் மீதான மனிதாபிமானமற்ற அட்டூழியங்கள் பற்றிய செய்திகளை நாம் படிக்கிறோம்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சமூக நீதி குறித்து பேசுகின்றனர். சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் செருப்பு போட்டு செல்வதற்காகவும், இருசக்கர வாகனத்தில் சென்றதற்காகவும் தலித்துகள் தாக்கப்படுகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் அதிகார வர்க்கத்துடன் தொடர்புடைய கள்ளச்சாராய மாஃபியாக்களால் பரிதாபமாக தலித் மக்கள் உயிரிழந்தனர். வேங்கை வயலில் மனிதக்கழிவை குடிநீரில் கலந்த இழிவான சம்பவம் இங்கேதான் நடந்தது.
வறுமை காரணமாக அவர்களின் குழந்தைகள் மோசமான கற்பித்தல் தரத்துக்கும் கற்றலுக்கும் பெயர் பெற்ற மாநில அரசு பள்ளிகளில் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களுக்கு நல்ல கல்வியும் கண்ணியமான எதிர்காலமும் எவ்வாறு கிடைக்காமல் போகிறது." எனப் பேசியுள்ளார்.
-
வேலூர், ராணிப்பேட்டைக்கு ஹை அலர்ட்! உஷாரா இருங்க மக்களே! வானிலை மையம் வார்னிங் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
நீலகிரியில் தமிழக பகுதிக்கு உரிமைக் கொண்டாடும் கேரளம்! எல்லையில் பதற்றம்! தவாக வேல்முருகன் கண்டனம் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
காலியாக போகும் காவிரி.. வேலையை காட்டும் வெயில்! இந்த வருஷம் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்! -
செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது! ஆட்டம் தொடங்கியாச்சு! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க











Click it and Unblock the Notifications