கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா?
சென்னை: உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு அரிய வானியல் நிகழ்வாக, ஆகஸ்ட் 12-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
கிரகணத்தின்போது சூரியனை நிலவு மறைக்கும் என்பதால், குறிப்பிட்ட நேரம் வரை சூரிய வெளிச்சம் குறைவாகவே இருக்கும். அந்த வகையில் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஐரோப்பாவில் ஒரு வரலாற்று நிகழ்வு
கடந்த 1999-ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஐரோப்பிய கண்டத்தில் தென்படப்போகும் முதல் முழு சூரிய கிரகணம் இதுவாகும். சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அரிய நிகழ்வு மீண்டும் நிகழ உள்ளதால், இதனைக்காண இப்போதே சுற்றுலாப் பயணிகளும் ஆராய்ச்சியாளர்களும் திட்டமிட்டு வருகின்றனர்.
எந்தெந்த நாடுகளில் தெரியும்?
இந்த முழு சூரிய கிரகணத்தின் பாதை முக்கியமாக வட அட்லாண்டிக் பெருங்கடல் வழியாகச் செல்கிறது. இது கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், ரஷ்யாவின் ஒரு பகுதி மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் முழுமையாகத் தெரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்பெயினில் இந்த கிரகணம் மிகத் தெளிவாகத் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் காண முடியுமா?
இந்திய விண்வெளி ஆர்வலர்களுக்கு இது ஒரு ஏமாற்றமான செய்தியாக இருக்கலாம். இந்த சூரிய கிரகணம் நிகழும் நேரத்தில் இந்தியாவில் இரவு நேரமாக இருக்கும் என்பதால், இதனை இந்தியாவில் நேரடியாகக் காண முடியாது. இருப்பினும், இணையதளங்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்கள் மூலம் நேரலையில் இந்த நிகழ்வை மக்கள் கண்டு ரசிக்கலாம்.
முழு சூரிய கிரகணம் என்றால் என்ன?
நிலவானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும்போது, சூரியனின் ஒளி மறைக்கப்பட்டு பூமியின் ஒரு பகுதியில் நிழல் விழும் நிகழ்வே சூரிய கிரகணம் எனப்படுகிறது. முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியன் முழுமையாக நிலவால் மறைக்கப்பட்டு, பகல் நேரத்திலும் சில நிமிடங்கள் இருள் சூழும்.
பாதுகாப்பு எச்சரிக்கை
சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தகுந்த பாதுகாப்பு கண்ணாடிகள் அல்லது பிரத்யேக கருவிகளைப் பயன்படுத்தி மட்டுமே இதைக் காண வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications