குளமான கண்கள்.. பார்த்ததும் உருகிய தோனி.. போட்டிக்கு பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.. தல தலதான்!
சென்னை: நேற்று சிஎஸ்கே டெல்லி போட்டிக்கு பின் கேப்டன் தோனி களத்தில் நடந்துகொண்ட விதம் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லிக்கு எதிரான ஐபிஎல் ப்ளே ஆப் ஆட்டத்தில் வென்று 2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே பைனல் சென்றுள்ளது. கடந்த சீசனில் மோசமாக ஆடி சிஎஸ்கே ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை முதல் அணியாக இழந்தது.
ஆனால் இந்த முறை சிஎஸ்கே முதல் அணியாக பைனல் சென்றுள்ளது. நேற்று முதலில் ஆடிய டெல்லி 172 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே எளிதாக 173 ரன்கள் எடுத்து வென்றது.

சிறுமி
நேற்று இந்த மேட்சில் தோனி பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது ரசிகர்கள் இடத்தில் அமர்ந்து இருந்த குட்டி சிறுமியும், அவளின் குட்டி அண்ணனும் கவனம் ஈர்த்தனர். தோனியின் பேட்டிங்கை மிகவும் ஆர்வமாக நகத்தை கடித்தபடி இரண்டு குட்டீஸும் பார்த்துக்கொண்டு இருந்தனர். பெரிய திரையில் ஓவர்களுக்கு இடையில் இவர்களின் முகம் காட்டப்பட்டதை தோனியும் கவனித்தார்.

குட்டீஸ்
சிஎஸ்கே வெற்றிபெற வேண்டும் என்று வேண்டியபடி இவர்கள் அமர்ந்து இருந்தனர். இந்த நிலையில்தான் கடைசியில் தோனி பவுண்டரி அடித்து வெற்றிபெற்றதும், எழுந்து குதித்து வெற்றியை கொண்டாடாமல் இரண்டு பேருமே ஆனந்த கண்ணீர் விட்டனர். பொதுவாக சிறுவர், சிறுமியர் இப்படி கிரிக்கெட் வெற்றிக்கு எமோஷனல் ஆகி கண்ணீர்விட மாட்டார்கள்.

தோனி பவுண்டரி
வெற்றிபெற்றுவிட்டோம் என்ற சந்தோஷத்தில் ஜாலியாக குதிப்பார்கள். ஆனால் இவர்கள் இருவரும் பெரியவர்கள் போல ஆனந்த கண்ணீர் விட்டது மைதானத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சிஎஸ்கேவின் வெற்றி மீது, தோனியின் ஆட்டம் மீதும் எவ்வளவு அன்பு, நம்பிக்கை வைத்து இருந்தால் அவர்கள் கண்ணீர்விட்டு இருப்பார்கள்..! இதை பார்த்ததும் தோனியும் ஒரு நொடி திகைத்து போனார்.

திகைத்து போனார்
இவ்வளவு சிறிய வயதில் கண்ணீர்விடும் அளவிற்கு சிஎஸ்கே வெற்றியை கொண்டாடுகிறார்களே என்று வியந்து போனார். பெவிலியன் திரும்பிய தோனி, குன்டஸ் இருவரும் இருந்த இடத்திற்கு கீழே சென்று கையை உயர்த்தி நன்றி தெரிவிப்பது போல சைகை காட்டினார். தோனி இப்படி அருகில் வந்து பேசியதை இரண்டு குட்டீஸும் நம்ப முடியாமல் திகைத்து நின்றனர்.

நன்றி
அப்போதுதான் தோனி இன்னொரு நம்ப முடியாத விஷயத்தை செய்தார். தனது கையில் இருந்த மேட்ச் பந்தில் கையெழுத்து போட்ட தோனி அதை அந்த குட்டீஸிடம் தூக்கி எறிந்தார். பந்தை லாவகமாக பிடித்த சிறுவன் அதை தனது அம்மாவிடம் கொண்டு சந்தோசமாக காட்டினார். அந்த சிறுமியும் கண்களில் தண்ணீர் பெருக சிரித்துக்கொண்டே தோனியை பார்த்து நன்றி கூறினார்.

கம்பேக்
தோனியின் கம்பேக் காரணமாக நேற்று மேட்ச் முடிந்த பின் மைதானமே மிகவும் நெகிழ்ச்சியாக காணப்பட்டது. சிஎஸ்கே நேற்று வெற்றிபெற்ற போது தோனியின் ஆட்டத்தை பார்த்து அவரின் மனைவியும் கண்ணீர்விட்டார். இந்த நிலையில்தான் சிறுவனிடம் பந்தை கொடுத்து தோனி நன்றி சொன்ன விதம் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கடைசி 4 போட்டிகளில் 3ல் சேப்பாக்கம் மண்ணில் ஆடும் சிஎஸ்கே.. சென்னை அணியின் அட்டவணை.. முழு விவரம்! -
வருங்கால சிஎஸ்கே கேப்டன்.. ஆயுஷ் மாத்ரே பேட்டிங் ஆர்டரில் மாற்றம்.. ருதுராஜ் கொடுத்த மெகா அப்டேட்! -
ஐபிஎல் தொடரில் RCB இல்லை? பெயரை மாற்ற புதிய உரிமையாளர்கள் திட்டம்? வந்த திடீர் விளக்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications