“பிரதமர் மோடியை கொன்று விடுவேன்”.. என்.ஐ.ஏ கட்டுப்பாட்டு அறைக்கு இந்தியில் பேசிய மர்ம நபர்.. ஷாக்!
சென்னை: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐந்து கட்டங்களாக 430 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 6ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

ஜூன் 1 ஆம் தேதியுடன் 7 கட்ட தேர்தலும் நிறைவடைந்து, ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 6, 7 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் மர்ம நபர் ஒருவர்.
பிரதமர் மோடியை கொலை செய்து விடுவேன் என இந்தியில் பேசிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார் மர்ம நபர். இதையடுத்து, என்.ஐ.ஏ அதிகாரிகள், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் அளித்துள்ளனர்.
என்.ஐ.ஏ அளித்த புகாரை அடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர் கிரைம் போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்.ஐ.ஏ கண்ட்ரோல் ரூமை தொடர்பு கொண்டு பேசிய நபர், எங்கிருந்து பேசினார் என நெட்வொர்க் சிக்னலை வைத்து கண்டறியும் பணி நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் குஜராத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையம் வழியாக அகமதாபாத் சென்ற 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கண்டறிய தீவிர விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications