"அம்மா" மறைந்து 2 ஆண்டு.. 5ம் தேதி நினைவு நாள்.. அஞ்சலி செலுத்த தயாராகிறது அதிமுக!
வருகிற 5-ம் தேதி ஜெயலலிதா 2-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
Recommended Video

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி டிசம்பர் 5ம் தேதி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்த உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
கடந்த முறை ஜெயலலிதாவின் ஓராண்டு நினைவு நாளின்போது அதிமுகவில் ஏகப்பட்ட குழப்பங்கள் நீடித்து வந்தன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் நடத்தினர்.

நினைவிடம்
இந்த பேரணியானது வாலாஜா சாலை வழியாக, காமராஜர் சாலையில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

ஜெ. தீபா
அதேபோல், மற்றொரு புறம் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதற்கு நடுவில், ஜெயலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தன் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தினார்.

வருகிற 5-ம் தேதி
ஜெயலலிதாவின் 2-வது வருட நினைவு தினமும் இதுபோலவே அனுசரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 5ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

உறுதிமொழி ஏற்பு
இதனை தொடர்ந்து அன்று காலை 9.30 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்பு நடைபெறுகிறது. எனவே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications