"அம்மா" மறைந்து 2 ஆண்டு.. 5ம் தேதி நினைவு நாள்.. அஞ்சலி செலுத்த தயாராகிறது அதிமுக!
வருகிற 5-ம் தேதி ஜெயலலிதா 2-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
Recommended Video

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி டிசம்பர் 5ம் தேதி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்த உள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
கடந்த முறை ஜெயலலிதாவின் ஓராண்டு நினைவு நாளின்போது அதிமுகவில் ஏகப்பட்ட குழப்பங்கள் நீடித்து வந்தன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் நடத்தினர்.

நினைவிடம்
இந்த பேரணியானது வாலாஜா சாலை வழியாக, காமராஜர் சாலையில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று அங்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

ஜெ. தீபா
அதேபோல், மற்றொரு புறம் டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதற்கு நடுவில், ஜெயலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தன் பேரவை சார்பில் அஞ்சலி செலுத்தினார்.

வருகிற 5-ம் தேதி
ஜெயலலிதாவின் 2-வது வருட நினைவு தினமும் இதுபோலவே அனுசரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 5ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

உறுதிமொழி ஏற்பு
இதனை தொடர்ந்து அன்று காலை 9.30 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்பு நடைபெறுகிறது. எனவே அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
-
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications