ஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..!
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது
Recommended Video
சென்னை: ஒரு பிரச்சனையும் இல்லை.. ஒரு விவகாரமும் இல்லை.. ஒரு புகாரும் இல்லை.. அதனால்தான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியின் மனு எடுத்த எடுப்பிலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.
வரும் 5-ம் தேதி வேலூரில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் அதிமுக, திமுக இரு மெகா கட்சிகளும் களம் இறங்குகின்றன. இவர்களுக்கு நடுவில் தைரியமாக நின்று போட்டியில் குதித்துள்ளது நாம் தமிழர் கட்சி!

டிடிவி தினகரன், கமல் போன்ற ஜாம்பவான்களே போட்டியிடாத நிலையில், தற்போது மும்முனை போட்டி என்ற நிலை வேலூரில் உருவாகி உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில், வேட்புமனு பரீசிலனை இன்று தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடந்தது. அப்போது, அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணையாமல், இரட்டை இலை சின்னத்தில் எப்படி போட்டியிட முடியும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதை அடுத்து, ஏசி சண்முகத்தின் வேட்பு மனு நிறுத்தப்பட்டது.
#Vellore4Vivasayi
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) July 19, 2019
வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக "விவசாயி" சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
நமது சின்னம்: #விவசாயி
நமது வேட்பாளர்: #தீபலட்சுமி
வெல்லட்டும் விவசாயி!#Seeman #Deepalakshmi #NTK pic.twitter.com/p3NMFbSKKC
இதேபோல பணப்பட்டுவாடா புகாரில் கதிர் ஆனந்த் வேட்பு மனுவும் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பரபரப்புக்கு பிறகு இவர்களின் மனுக்கள் மீண்டும் ஏற்கப்பட்டன. ஆனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியின் வேட்பு மனு உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.
இதே தீபலட்சுமிதான், வேலூரில் தேர்தல் நின்றபோது, "சம்பந்தப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்யாமல், ஒட்டுமொத்தமாக தேர்தலை நிறுத்தியது என்ன நியாயம், பணப்பட்டுவாடாவில் தொடர்புடைய அதிமுக, திமுக வேட்பாளர்களை திரும்பவும் வேட்பாளராக நிறுத்தகூடாது" என்று வாதிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications