வண்டலூர் உயிரியல் பூங்காவில்.. மேலும் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு!
சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு டெல்டா வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
மனிதர்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாடாய்படுத்திய கொரோனா வைரஸ் விலங்குகளையும் தாக்கி அதிர்ச்சி அளித்து வருகிறது.
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இரண்டு சிங்கங்கள் பலியாகின.

சிங்கங்களுக்கு கொரோனா
11 சிங்கங்கள் சரியாக உணவு உட்கொள்ளாமல் தொடர் இருமல் போன்றவற்றால் அவதிபட்டுள்ளன. இதனால் பூங்காவில் இருந்த 11 சிங்கங்களின் மூக்கு மற்றும் ஆசன வாய் மாதிரிகளை மத்தியபிரதேசத்தில் உள்ள ஆய்வகத்திற்கும், இரத்த மாதிரிகளை தமிழ்நாடு கால்நடை பல்கலை கழகத்திற்கும் அனுப்பினர்.

2 சிங்கம் பலி
இதனிடையே மூன்றாம் தேதி நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் மூக்கில் திரவம் சுரந்து பலியானது. பின்னர் ஆய்வு முடிவுகளில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியபட்டது. இதனை தொடர்ந்து மேலும் ஒரு சிங்கமும் கொரோனாவுக்கு இரையானது.

தீவிர பரிசோதனை
அதன் பின்னர் அரசு கால்நடை மருத்துவ குழுவினர் சிங்கங்களை பரிசோதித்தனர். இது தவிர அங்குள்ள சிறுத்தை, புலி உள்ளிட்ட அணைத்து விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் 4 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சிங்கங்களுக்கு கொரோனா
இந்த 4 சிங்கங்களுக்கும் டெல்டா வகை வைரஸ் தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிங்கங்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதால் இதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து இந்த 4 சிங்கங்களும் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications