Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் கையெழுத்து போட்ட ஹூண்டாய் கார்.. எகிறிய டிமாண்ட்.. கடைசியில் புஸ்ஸுன்னு போச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை அருகே ஹூண்டாய் நிறுவனத்துக்கு சமீபத்தில் விசிட் செய்தார் முதல்வர் முக ஸ்டாலின்.இந்தியாவில் தனது ஒரு கோடியாவது வாகனத்தை உற்பத்தி செய்து சாதித்துள்ளது ஹூண்டாய் நிறுவனம்.

Recommended Video

    Stalin கையெழுத்துப் போட்ட Car Alcazar…அதிர்ச்சி கொடுத்த Hyundai | Oneindia Tamil

    ஹூண்டாய் நிறுவனத்தின் அல்கசார் என்ற எஸ்யூவி வகை வாகனம் தற்போது சந்தைக்கு வருகிறது அல்லவா, அதுதான் ஒரு கோடியாவது வாகனம்.

    எனவே அதன் மீது ஸ்டாலின் தனது கையெழுத்தை போட்டார். காரின் போனட் பகுதியில், வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு முக ஸ்டாலின் என்று தனது கையெழுத்திட்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி என்பதையும் எழுதி இருந்தார் ஸ்டாலின்.

    காருக்கு டிமாண்ட்

    காருக்கு டிமாண்ட்

    முன்னதாக தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஹூண்டாய் நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது மேட்டருக்கு வருவோம். முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து போட்ட வாகனம் விற்பனைக்கு வரும்போது அதை எப்படியாவது தாங்கள் வாங்கி விட வேண்டும், நினைவு பரிசாக மாற்றிவிட வேண்டும் என்று பல்வேறு தொழில் அதிபர்கள் வழி மீது விழி வைத்து காத்திருந்தார்கள். தொழிலதிபர்கள் இருக்கட்டும்.. அமைச்சர்களில் சிலர் கூட தங்கள் தலைவர் கையெழுத்துப் போட்ட வாகனங்களை வாங்குவது பெருமை என்று நினைத்து அதற்கான முயற்சிகளை ஆரம்பித்தனர்.

    ஹூண்டாய் வேறு பிளான்

    ஹூண்டாய் வேறு பிளான்

    இதில்தான் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிலதிபர்கள் அல்லது அமைச்சர்கள் என்று யார் நினைத்தாலும் அந்த காரை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிவிப்பு தான் இதற்கு காரணம்.

    ஏமாற்றம்

    ஏமாற்றம்

    ஆம்.. ஒரு கோடியாவது கார் என்பதோடு முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்ட கார் என்பதால் நினைவு பெட்டகமாக அந்த காரை தங்கள் நிறுவனமே வைத்துக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது, இது விற்பனைக்கு அல்ல என்பதுதான் இதன் அர்த்தம். எனவே அந்த காரை வாங்க வேண்டும் என்று ஆவலோடு காத்திருந்த அத்தனை பேரும் ஏமாந்து போய் விட்டனர்.

    தெற்காசியாவில் தமிழகத்தின் முக்கியத்துவம்

    தெற்காசியாவில் தமிழகத்தின் முக்கியத்துவம்

    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பரந்து விரிந்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தில் சுமார் 25,000 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் பங்கேற்ற ஸ்டாலின் தெற்காசியாவில் அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்ற இருப்பதாக சூளுரைத்தார் என்பது நினைவிருக்கலாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+