அதிகரிக்கும் டெங்கு.. ஆக்ஷனில் இறங்கிய பொது சுகாதாரத்துறை.. தினமும் காய்ச்சல் முகாம் நடத்த உத்தரவு
சென்னை: டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை தினந்தோறும் காய்ச்சல் முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையும் நெருங்கி வருகிறது. மழை காரணமாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டும் இன்றி கொசு உற்பத்தியை ஏற்படுத்தும் வகையில் தண்ணீரை அப்புறப்படுத்தாத நபர்களுக்கு அபராதமும் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி , கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் தினமும் 20 முதல் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் 600-ஐ தாண்டி பதிவாகி உள்ளது. டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தினமும் ஆயிரம் இடங்களில் பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்றும் மறு உத்தரவு வரும் வரை நடத்த வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications