"சுவாமியே சரணம் ஐயப்பா”.. கார்த்திகை முதல் நாள்.. மாலை அணிந்து விரதம் தொடங்கிய சபரிமலை பக்தர்கள்!
சென்னை: கார்த்திகை மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில், சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். தமிழ்நாடு முழுவதும், ஐயப்பன் கோவில்களில் அதிகாலையிலேயே மாலை அணிந்து பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 15 ஆம் தேதியான நேற்று, மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது. வரும் டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜை, ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று திறக்கப்பட்டது.

நவம்பர் 16 ஆம் தேதி, அதாவது கார்த்திகை முதல் நாளான இன்று அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐயப்பன் பக்தர்கள் இன்று அதிகாலையில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். "சுவாமியே சரணம் ஐயப்பா" என்ற கோஷத்துடன் விரதத்தை தொடங்கியுள்ளனர்.
சபரிமலை அய்யப்பன் பக்தர்கள் 48 நாள்கள் விரதத்திற்கு பிறகு இருமுடி கட்டிக்கொண்டு காடு மேடு ஆறு மலை கடந்து சபரிமலை நோக்கி பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு கல் முள் கடந்து சென்று ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு தீராத பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.
சபரிமலைக்கு விரதம் இருந்து பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியிலேயே பெரும்பாலும் விரதத்தை தொடங்குவது வழக்கம். அந்தவகையில் இன்று ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். குருசாமி கையால் துளசி மணிமாலை அணிந்து ஐயப்ப விரதத்தை துவக்க வேண்டும் என்பது நியதி. முதல் முறையாக சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் கருப்பு உடை அணிந்தும், பல முறை சபரிமலை சென்றவர்கள் காவி, நீல நிறங்களில் உடை அணிந்தும் விரதம் இருப்பார்கள்.
அதன்படி, கார்த்திகை மாதம் 1 ஆம் தேதியான இன்று அதிகாலை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கி உள்ளனர். தமிழகம் முழுவதும் இருக்கின்ற பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்தர்கள் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடிவிட்டு, மாலை அணிந்து கொண்டுள்ளனர்.
-
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications