Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெட்ரோல் குண்டு வீச்சு - தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்- 250 பேரிடம் விசாரணை: டிஜிபி சைலேந்திரபாபு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் வீடுகள், வாகனங்கள் மீது மட்டும் குறிவைத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது. கோவை, ஈரோடு, சென்னை மற்றும் மதுரையில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இச்சம்பவங்களைத் தொடர்ந்து கோவையில் அனைத்து இயக்கங்கள், மத அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தை போலீசார் நடத்தினர். கோவை உள்ளிட்ட பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தடுக்க பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவ இடங்களில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

 என்.ஐ.ஏ. சோதனை- 11 பேர் கைது

என்.ஐ.ஏ. சோதனை- 11 பேர் கைது

இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புச் சொந்தமான அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகாமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கடந்த 22-ந் தேதி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

 1410 பேர் கைதாகி விடுதலை

1410 பேர் கைதாகி விடுதலை

இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 1410 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தஞ்சாவூரில் பஸ் மீது கல்வீசி சேதம் ஏற்படுத்திய அரித்திரி, சலீம், சிராஜீதின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிறுவனங்களை குறிவைத்து வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 200 பேரிடம் விசாரணை

200 பேரிடம் விசாரணை

இச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதுவரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 100 நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களது இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 தே.பா.சட்டம் பாயும்

தே.பா.சட்டம் பாயும்

கோவை மாநகரில் ஆர்.ஏ.எப் இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படை இரண்டு பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படை இரண்டு பிரிவுகள் என கூடுதலாக 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணன் அங்கு முகாமிட்டுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+