வாய் திறந்த வளர்மதி.. பாதி டாஸ்மாக் + மீதி சைடு டிஷ் = ரூ.1000.. திமுகவுக்கு வந்த ஆவேசம்.. என்னாச்சு
சென்னை: பாதி பணம் டாஸ்மாக் போகிறது, மீதி பணம் சைடு டிஷ்ஷுக்கும் தான் போகிறது என்று மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாயை, அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வளர்மதி இன்று பல்வேறு இடங்களில் பிரச்சரம் செய்தார். அவருடன் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு, அதிமுகவுக்கு ஓட்டு கேட்டனர்.

வளர்மதி: அப்போது வளர்மதி, "எல்கேஜி படிக்கும் குழந்தைக்குக்கூட, திமுக அரசு வந்ததிலிருந்து பாதுகாப்கே கிடையாது. போலீஸ்காரர்களின் காவல்துறை உதவியுடனேயே, குழந்தைகளுக்கு அயோக்கியர்கள் பாலியல் தொந்தரவு தருகிறார்கள்.. இதுக்கெல்லாம் காரணம் கஞ்சா தான். அந்த கஞ்சா விற்பனையும், போலீஸ்காரர்களின் உதவியுடன்தான் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. தவறு செய்தவர்களை பிடித்து விசாரித்தால், கஞ்சா போதையில் செய்துவிட்டேன் என்று சாக்கு சொல்கிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து தந்த அழுத்தத்தால் தான், இன்றைக்கு மகளிர் உரிமைத் தொகை ஒரு சில பேருக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களை சொல்லி, தகுதியில்லை என்கிறார்கள். பெண்ணாக இருந்தாலே தகுதி தானே? அதைவிட வேறு என்ன தகுதி வேண்டும்?
சைட் டிஷ்: அப்படி வரும் ஆயிரம் ரூபாய் பணத்தை கூட பெண்கள் அவர்கள் தேவைக்கு பயன்படுத்த முடியவில்லை. அதை ஆண்கள் பிடுங்கிக் கொண்டு டாஸ்மாக்கிற்கு கொடுத்து விடுகின்றனர். 500 ரூபாய் சரக்குக்கும், 500 ரூபாய் சைடு டிஷ்ஷுக்கும் சென்று விடுகிறது என்றார்" என்றார் வளர்மதி.
இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில், எதிர்க்கட்சிகளால் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருவது மகளிர் உரிமைத்தொகைதான். ஆளும் கட்சிகள் தங்களது சாதனை திட்டமாக, இந்த திட்டத்தை பற்றி பிரச்சாரம் செய்ய, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ, இந்த திட்டத்தை விமர்சித்து வருகிறார்கள்.
கதிர் ஆனந்த்: வேலூர் தொகுதியில், 4 நாட்களுக்கு முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட கதிர் ஆனந்த், திமுக செய்த சாதனைகளை பேசும்போது, "மேடையில் இருந்து பார்த்தால் சுற்றியுள்ள பெண்களின் முகம் எல்லாம் பளபளவென்று தெரிகிறது. என்னவென்று தெரியவில்லை எல்லோரும் பாண்ட்ஸ் பவுடர், ஃபேர் அண்ட் லவ்லி போட்டு பளபளன்னு இருக்கீங்க..? என்ன காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபாய் செலுத்தியது வந்துவிட்டதா" என்று கேட்டார்.
அதாவது, முதல்வர் செலுத்திய மகளிர் உரிமைத்தொகையில் தான், பெண்கள் பவுடர் போட்டுக்கொண்டு பளபளவென்று இருப்பது போல திமுக எம்பி கதிர் ஆனந்த் பேசியிருந்தது சர்ச்சைக்குரியதாக மாறியது.
பொன்முடி: இப்படித்தான், ஏற்கனவே ஒருமுறை அமைச்சர் பொன்முடி, "மகளிர் எல்லாம் ஓசி பஸ்ஸில்தான் போறீங்க" என்று சொல்லி பரபரப்பை கிளப்பியிருந்தார்.. இப்போது, கதிர் ஆனந்த்தும் இதுபோல பேசி, திமுகவிற்கு சங்கடத்தை தந்தார்.. இப்படிப்பட்ட சூழலில், எதிர்க்கூடாரத்திலிருந்து, மூத்த தலைவர் மகளிர் உரிமைத்தொகையை விமர்சித்திருப்பதற்கு திமுக தரப்பில் கடும் எரிச்சலை தந்து வருகிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications