"மிஸ் யூஸ்" பண்றீங்களா.. எந்த பிரதமராவது இப்படி ஆளுநர் மாளிகையில் செய்வாங்களா?.. விசிக கேட்ட கேள்வி
கவர்னர் மாளிகையில் பாஜகவினர் ஆலோசனை நடத்தலாமா என்று வன்னியரசு கேட்கிறார்
சென்னை: ஆளுநர் மாளிகையில் பாஜகவினரோடு பிரதமர் ஆலோசனை நடத்தலாமா? என்று விசிக கேள்வி எழுப்பி உள்ளது.
நேற்றைய தினம், செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக் கொண்ட பிரதமர், கிண்டி ஆளுநர் மாளிகை சென்றார்.
அங்கு பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவதாகவும், இந்த ஆலோசனையில், பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்றும் முன்னமேயே தகவல்கள் பரபரத்தன.
விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், தமிழகத்தில் பாஜகவின் பிரதிநிதித்துவம் பெறுவது குறித்தும் தமிழக அரசியலில் பாஜக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப் போவதாகவும் சொன்னார்கள்..

பொன்.ராதா
அதன்படியே விளையாட்டு விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி காரில் நேராக ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.. சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.. பிறகு, தமிழக பாஜக தலைவர்கள், மூத்த தலைவர்கள் பிரதமரை சந்திக்க சென்றனர்.. கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.. ஆனால், என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.. எம்பி தேர்தல் குறித்த வரஉள்ள நிலையில், தமிழக பாஜகவுக்கு புதிய நிர்வாகிகளின் தேவைகள் பற்றி பேசியதாக தெரிகிறது..

பிளான் என்ன
அதேபோல, அதிமுகவில் உள்ள பூசல்களை பற்றியும் தமிழக நிர்வாகிகளிடம் பிரதமர் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.. இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என்று, மாநில தலைவர் அண்ணாமலை சொல்லி இருந்தாலும், நிச்சயம் பாஜக - அதிமுக - திமுக என 3 கட்சிகள் குறித்தும் பேசியிருப்பார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. நேற்றும் - இன்றும் சென்னையில் பிரதமர் தங்கி உள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் ஏற்பட்டும் வருகிறது.

மிஸ் யூஸ்
இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனையை விசிக விமர்சித்துள்ளது.. இதுகுறித்து அக்கட்சியின் வன்னியரசு பதிவிட்டுள்ள ட்வீட்டில், "ஆளுநர் மாளிகையில் ஆளுநருடனோ அல்லது மாநில வளர்ச்சி குறித்து முதல்வருடனோ, ஆலோசனை நடத்தலாம். ஆனால், பாஜக கட்சியினரோடு ஆளுநர் மாளிகையில் ஆலோசனைக்கூட்டம் நடத்துவது அதிகாரமீறல் ஆகாதா? இதற்குமுன் எந்த பிரதமராவது தனது கட்சியினரோடு ஆளுநர் மாளிகையை மிஸ் யூஸ் செய்திருக்கிறார்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

கேள்விக்கணைகள்
இதற்கு பாஜகவினர் திரண்டு வந்து பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்... "ஏன் தலைமைச் செயலகத்தில் முதல்வரை திமுகவினர் சந்தித்து பேசுவதில்லையா? ஆளுநர் மாளிகையில் நேரடியாக இதுவரை கட்சி தலைவரை வைத்துக்கொண்டு கூட்டம் போட்டது இல்லைதான்., ஆனால், இவர்கள் கட்சி தொடர்பான ஆலோசனையை தான் செய்தார்கள் என்று உறுதியாக சொல்ல முடியுமா? தமிழகத்தில் இருக்கும் சட்ட ஒழுங்கை பற்றி, பாரத பிரதமரிடம், அவரது கட்சியை சேர்ந்தவர்கள் புகார் தரவோ, மனு கொடுக்கவோ போகக்கூடாதா? என்றும் வன்னியரசுக்கு பதில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
-
விசிகவுக்கான 8 தொகுதிகள் முடிவாகிவிட்டது.. ஸ்டாலின் முறையாக அறிவிப்பார்.. திருமாவளவன் பேட்டி! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications