என் உயிருக்கு ஆபத்து... ட்விட்டரில் இப்படி போட்டதற்கு காரணமே முரளிதரன் சினிமாதான்: சீனுராமசாமி
சென்னை: தம்முடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குநர் சீனு ராமசாமி திடீரென ட்விட்டரில் பதிவு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது வீட்டுக்கு போலீசார் விரைந்துள்ளனர்.
கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று தொடங்கி தர்மதுரை, கண்ணே கலைமானே என படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக் காற்று படம் தேசிய விருதுகளை பெற்றது.
தென்மேற்கு பருவக் காற்று படத்தின் மூலம் விஜய்சேதுபதியை கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தவர். விஜய்சேதுபதிக்கு மக்கள் செல்வன் என பட்டம் வழங்கியவர். அண்மையில் முத்தையா முரளிதரன் சினிமா விவகாரத்தில் பட்டும் படாமல் கருத்து தெரிவித்திருந்தார் சீனு ராமசாமி.

உயிருக்கு ஆபத்து என ட்வீட்
இந்நிலையில் இன்று காலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் திடீரென "என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்." என சீனுராமசாமி பதிவிட்டிருக்கிறார். சீனுராமாசாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ட்வீட் பதிவைத் தொடர்ந்து இயக்குநர் சீனு ராமசாமி வீட்டுக்கு போலீசார் விரைந்தனர்.

தொலைபேசி மூலம் மிரட்டல்கள்
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சீனு ராமசாமி சந்தித்தார். இந்த சந்திப்பில் சீனு ராமசாமி கூறியதாவது: முத்தையா முரளிதரன் சினிமா பட பிரச்சனையில் எல்லோரையும் போல விஜய்சேதுபதிக்கு வேண்டுகோள் வைத்தேன். அதில் இருந்து தொலைபேசி மூலமாக மிரட்டல்கள் வருகின்றன.

பிரச்சனையை உருவாக்க முயற்சி
எனக்கும் நடிகர் விஜய்சேதுபதிக்கும் தனிப்பட்ட பிரச்சனை போல இதனை சித்தரிக்கின்றனர். எனக்கும் விஜய்சேதுபதிக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி கூர்மையாக்க சிலர் முயற்சிக்கின்றனர். இதுபற்றி விஜய் சேதுபதியிடமும் நான் பேசினேன்.
|
விஜய்சேதுபதி சொன்னது என்ன?
விஜய்சேதுபதியின் ரசிகர்கள் என்னுடைய தம்பிகள். அவர்கள் இதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். நமக்கு இடையே யாராலும் முரண்பாடுகளை உருவாக்க முடியாது என விஜய் சேதுபதியிடமும் என்னிடம் கூறியிருக்கிறார்.

போலீசில் எழுத்துப்பூர்வமாக புகார்
ஆபாசவார்த்தைகளால் தொலைபேசியில் நள்ளிரவிலும் மிரட்டல் விடுக்கின்றனர். அதனால்தான் ட்விட்டரில் அப்படி ஒரு பதிவை போட்டேன். இது தொடர்பாக போலீசில் எழுத்துப்பூர்வமாகவும் புகார் தர இருக்கிறேன். இவ்வாறு சீனுராமசாமி கூறினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications