சமூக நீதிக்கு பாடுபட்டவர்களுக்கு தந்தை பெரியார் விருது... விண்ணப்பிப்பது இப்படித்தான்.. முழு தகவல்!
சென்னை: 2022ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் சமூக நிதியை நிலைநாட்டப் போராடியவர்களில் முக்கியமானவர் தந்தை பெரியார். இட ஒதுக்கீடு, இந்தி திணிப்பு என பல்வேறு விஷயங்களிலும் மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்.
பெரியாரின் சாதனைகளைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு அவரது பெயரில் பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

பெரியார் விருது
அதன்படி மாநிலத்தில் சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்புச் செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995 முதலே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2022ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம்.

அறிவிப்பு
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்புச் செய்வதற்காக 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம்
இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்கப் பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காகப் பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள்
தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைப்பேசி எண் மற்றும் சமூக நீதிக்காகப் பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2022. ஆகும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
-
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications