சென்னையில் கிடுகிடு உயர்வு.. 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு.... முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 29 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலையில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரத்தை பார்ப்போம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 1415 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,896 ஆக உயர்ந்துள்ளது.

எங்கு பாதிப்பு

எங்கு பாதிப்பு

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டி 178 பேருக்கும், திருவள்ளூரில் 81 பேருக்கும், திருவண்ணாமலையில் 31 பேருக்கும், திருநெல்வேலியில் 19 பேருக்கும், விழுப்புரத்தில் 15 பேருக்கும், மதுரையில் 16 பெருக்கும், ராமநாதபுரத்தில் 23 பேருக்கும், சேலத்தில் 10 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கையில் 14 பேருக்கும், தென்காசியில் 16 பேருக்கும், தேனியில் 8 பேருக்கும், திருச்சி மற்றும் வேலூரில் தலா 9 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகரில் 6 பேர்

விருதுநகரில் 6 பேர்

கோவையில் 3 பேருக்கும், தருமபுரி, ஈரோடு, கரூர் , பெரம்பலூரில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் 4 பேருக்கும், திருவாரூரில் 8 பேருக்கும், திருப்பூரில் ஒருவருக்கும், விருதுநகரில் 6 பேருக்கும், ராணிப்பேட்டையில் 6 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 7 பேருக்கும், திருப்பத்தூரில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நிலவரம்

கொரோனா நிலவரம்

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. இதில் 19676 பேர் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 435 பேர் உயிரிழந்துவிட்டனர். 24547 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 14667 பேரும், செங்கல்பட்டில் 1602 பேரும், திருவள்ளூரில் 988 பேரும், காஞ்சிபுரத்தில் 291 பேரும், திருவண்ணாமலையில் 248 பேரும் கொரோனா பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மதுரையில் 145 பேரும், தூத்துக்குடியில் 101 பேரும், திருநெல்வேலியில் 89 பேரும் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுகிறார்கள். கள்ளக்குறிச்சியில் நோய் தொற்றுடன் 97 பேரும், ராணிப்பேட்டையில் 89 பேரும், வேலூரில் 99 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள்.

தமிழகத்தில் 44661 பேருக்கு கொரோனா தொற்று ஜுன் 14 ம் தேதி நிலவரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்பதை இப்போது பார்ப்போம்.

  • அரியலூர் 392
  • செங்கல்பட்டு 2882
  • சென்னை 31896
  • கோவை 176
  • கடலூர் 533
  • தர்மபுரி 27
  • திண்டுக்கல் 218
  • ஈரோடு 73
  • கள்ளக்குறிச்சி 344
  • காஞ்சிபுரம் 709
  • கன்னியாகுமரி 122
  • கரூர் 94
  • கிருஷ்ணகிரி 39
  • மதுரை 426
  • நாகப்பட்டினம் 113
  • நாமக்கல் 92
  • நீலகிரி 14
  • பெரம்பலூர் 146
  • புதுக்கோட்டை 51
  • ராமநாதபுரம் 158
  • ராணிப்பேட்டை 197
  • சேலம் 229
  • சிவகங்கை 90
  • தென்காசி 134
  • தஞ்சாவூர் 155
  • தேனி 146
  • திருப்பத்தூர் 47
  • திருவள்ளூர் 1865
  • திருவண்ணாமலை 671
  • திருவாரூர் 128
  • தூத்துக்குடி 398
  • திருநெல்வேலி 464
  • திருப்பூர் 116
  • திருச்சி 163
  • வேலூர் 152
  • விழுப்புரம் 437
  • விருதுநகர் 170
  • விமான நிலைய கண்காணிப்பில்: 200

(வெளிநாடு)

  • விமான நிலைய கண்காணிப்பில் 85

(உள்நாடு)

  • ரயில் நிலைய கண்காணிப்பில்: 309
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+