எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை?.. வண்ணங்களின் அடிப்படையில் கொரோனா மேப் வெளியிட்ட அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்திலேயே சென்னையில் அதிகபட்சமாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,821 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துவிட்டது.

தமிழகத்தில் 50 சதவீதம் பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டதாக சுகாதாரத் துறை கூறுகிறது. இந்த நிலையில் இன்று கொரோனா பாதித்த 66 பேரில் 43 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவர்.

விருதுநகரில் 2 பேர்

விருதுநகரில் 2 பேர்

செங்கல்பட்டில் ஒருவருக்கும் சென்னையில் 43 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 7 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், பெரம்பலூரில் 2 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், திருவண்ணாமலையில் ஒருவருக்கும் விழுப்புரத்தில் ஒருவருக்கும் விருதுநகரில் 2 பேருக்கும் இன்று கொரோனா பாதித்துள்ளது.

பச்சை

பச்சை

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 30 மாவட்டங்களில் சிகப்பு மண்டலங்களாகவும் 7 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும் ஒரே ஒரு மாவட்டம் மட்டும் பச்சை மண்டலமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 15க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் அவை சிகப்பு மண்டலமாகவும் அதைவிட குறைவாக இருந்தால் ஆரஞ்சு மண்டலமாகவும் கடந்த 28 நாட்களாக புதிய பாதிப்புகள் இல்லாதது பச்சை மண்டலமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

61 பெண்கள்

61 பெண்கள்

பிறந்த குழந்தை முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஆண் குழந்தைகள் 55 பேரும், பெண் குழந்தைகள் 49 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 1032 ஆண்களும், 471 பெண்களும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 153 ஆண்களும் 61 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு எண்ணிக்கை

பாதிப்பு எண்ணிக்கை

மாவட்ட வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:

அரியலூரில் 6 பேர், செங்கல்பட்டில் 58 பேர், சென்னையில் 495 பேர், கோவையில் 141 பேர், கடலூரில் 26 பேர், தருமபுரியில் ஒருவர், திண்டுக்கல்லில் 80 பேர், ஈரோட்டில் 70 பேர், கள்ளக்குறிச்சியில் 5 பேர், காஞ்சிபுரத்தில் 19 பேர், குமரியில் 16 பேர், கரூரில் 42 பேர், மதுரையில் 60 பேர் , நாகப்பட்டினத்தில் 44 பேர், நாமக்கலில் 55 பேர், நீலகரியில் 9 பேர், பெரம்பலூரில் 7 பேர், புதுக்கோட்டையில் ஒருவர், ராமநாதபுரத்தில் 14 பேர், ராணிப்பேட்டையில் 39 பேர், சேலத்தில் 30 பேர், சிவகங்கையில் 12 பேர், தென்காசியில் 38 பேர், தஞ்சையில் 55 பேர், தேனியில் 43 பேர், நெல்லையில் 63 பேர், திருப்பத்தூரில் 18 பேர், திருப்பூரில் 110 பேர், திருவள்ளூரில் 52 பேர், திருவண்ணாமலையில் 15 பேர் , திருவாரூரில் 29 பேர், திருச்சியில் 51 பேர், தூத்துக்குடியில் 27 பேர், வேலூரில் 22 பேர், விழுப்புரத்தில் 43 பேர், விருதுநகரில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+