பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும்.. எம்ஜிஆர் பிறந்தநாளில் தூதுவிட்ட ஓபிஎஸ்
சென்னை: உலகத்திலேயே பிரிந்தவர்கள் இணையக் கூடாது என்று சொல்லும் ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி தான் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம் என்று கூறிய ஓபிஎஸ், வரும் தேர்தலில் அனைவரும் இணைந்து போட்டியிட்டால் நம்மை யாராலும் வெல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அதிமுகவினர் எம்ஜிஆர் மாளிகையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் பேசுகையில், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மக்களின் பிரச்சனைகளை வலுவாக எடுத்து வைப்பதில்லை. அவரின் உடல்மொழியை பார்க்கும் போது, உலகிலேயே எங்குமில்லாத கூட்டணியாக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இருக்கிறது. அதுதான் மக்களின் பேச்சாக இருக்கிறது.
ஒரு முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவரை பார்த்து ஹலோ, ஹலோ சுகமா என்று கேட்கிறார். அதற்கு அவரும், ஆமாம்.. நீங்களும் நலமா என்று அவரும் சொல்கிறார். இப்படிதான் சட்டமன்றம் நடக்கிறது. அதேபோல் நாங்கள் தொடர்ந்து இணைப்புக்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். உலகத்திலேயே பிரிந்த சக்திகள் இணையக் கூடாது என்று சொல்கிற ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி தான்.
இதனை நாட்டு மக்களும் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். நாங்கள் இணைய வேண்டும் என்று தான் கூக்குரல் கொடுத்து கொண்டு இருக்கிறோம். அவர் இணைய முடியாது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். கூடிய விரைவில் மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அந்த முடிவுக்கு வருவோம். பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே அனைவரின் எண்ணம்.
வரும் தேர்தலில் அனைவரும் இணைந்து போட்டியிட்டால் நம்மை யாராலும் வெல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக ஒன்றுபடுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலிலேயே தென் மாவட்டங்களில் அதிமுக பல்வேறு தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது.
-
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
ஜெயலலிதா இருந்தா இப்படி நடக்குமா? மொத்தமாக கண்ட்ரோலை எடுத்த பாஜக..லிஸ்டோடு டெல்லிக்கு ஓடிய எடப்பாடி! -
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
அதிமுகவிடம் 57 தொகுதிகளை கேட்கும் பாஜக? 57 பொறுப்பாளர்கள் வராங்களாம்.. பிஎல் சந்தோஷ் சொன்ன தகவல்! -
தீயாய் வேலை செய்யும் திமுக..ஆமை வேகத்தில் அதிமுக! இப்படியே போனால் அவ்வளவு தான்? எடப்பாடிக்கு பிரஷர்! -
"அண்ணன் எடப்பாடியாரே.. எச்சரிக்கையா இருங்க”.. நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை.. திருமாவளவன் வார்னிங்! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர்












Click it and Unblock the Notifications