பெரியாரை இழிவுபடுத்துவதா? வெறிநாய், பைத்தியத்துக்கு பதில் சொல்வது இல்லை- சீமான் மீது வீரமணி தாக்கு!
சென்னை: தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரைக் குறிப்பிடாமல், பைத்தியக்காரர்களுக்கு நாங்கள் எப்போதும் பதில் சொல்வதில்லை.
மனிதர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கு மட்டுமே பதில் சொல்லி பழக்கப்பட்ட நாங்கள், இத்தகைய வெறிபிடித்தவர்களுக்குப் பதில் சொல்லி, கீழிறங்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கி.வீரமணி கூறியதாவது: 1962 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் ராஜ்யசபாவில்- ''திராவிடப் பாரம்பரியத்திலிருந்து வந்திருக்கின்ற நாங்கள்'' என்று தொடங்கி, ''மாநில உரிமைகளையும், திராவிட சமுதாயத்தினுடைய கலை, பண்பாடு, நாகரிகம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும்; போற்றப்படவேண்டும்; பாதுகாக்கப்படவேண்டும்'' என்று சொன்னார்களே, அதே நிலை இன்றைக்கும் தொடர்கிறது!

இன்னும் கேட்டால், முன்பு இருந்ததைவிட, அதிகமான அளவிற்கு ஜனநாயகத்திற்கும், சமூகநீதி, மதச்சார்பின்மைக்கும் அறைகூவல்களும், அரசமைப்புச் சட்டத்தை முழுக்க முழுக்க ஒன்றுமில்லாமல் ஆக்கப்படக்கூடிய சூழலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் காலகட்டத்தில் அறிஞர் அண்ணாவின் முன்னோட்டம் என்பது இன்றைக்கும் எவ்வளவு சரியானது என்பதைக் காட்டுகிறது.
தந்தை பெரியார் அவர்களால் ஆளாக்கப்பட்டு, மிகப்பெரிய அளவிற்கு அடித்தளத்தை 'திராவிட மாடல்' ஆட்சிக்கு அமைத்தவர் பேரறிஞர் அண்ணா. அதற்குப் பிறகு, இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அது தொடர்ச்சியாக வருகிறது என்று சொன்னால், ஆட்சிகள் காட்சிகளுக்கு அல்ல; மீட்சிகளுக்கு, இனத்தின் மீட்சிகளுக்கு என்பதை விளக்க ஒவ்வொரு நாளும் நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அருமையான சூழலை, இன்றைக்கு மீண்டும் உருவாக்கி, யாரிடமிருந்து நம்மினத்தைப் பாதுகாக்கப்பட வேண்டுமோ, அந்த ஆரிய மாயையை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும். 'ஆரிய மாயை' என்பது ''கூலி"களை ஏவுவார்கள்; புதிய புதிய வித்தைகளை காட்டுவார்கள். எனவே, அவற்றையெல்லாம் எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும்'' என்று அண்ணா அவர்கள், தந்தை பெரியாரிடத்தில் கற்ற பாசறை பாடத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
''அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்கிறார்!'' என்பதுதான் தந்தை பெரியார் அன்றைக்கு எழுதிய ஒரு செய்தி! அதற்கு என்ன பொருள் என்றால், ''அண்ணா என்ற தனி மனிதருக்கு வேண்டுமானால் மறைவு இருக்கலாம். நான் உருவாக்கிய கொள்கைகள், அதனை அண்ணா செயல்படுத்திய முறைகள் எல்லாம் என்றைக்கும் தொடரும்'' என்பதுதான். அதுதான் இன்றைக்கும் தேவைப்படுகிறது. எனவே, அண்ணா சிலை அல்ல, சீலம்! படம் அல்ல, பாடம்!
இன்று தந்தை பெரியாரை சிலர் விமர்சிக்கின்றனர். பைத்தியக்காரர்களுக்கு நாங்கள் எப்போதும் பதில் சொல்வதில்லை. மனிதர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கு மட்டுமே பதில் சொல்லி பழக்கப்பட்ட நாங்கள், இத்தகைய வெறிபிடித்தவர்களுக்குப் பதில் சொல்லி, கீழிறங்க விரும்பவில்லை. இவ்வாறு கி.வீரமணி தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications