பாமகவிடம் நிறைய பாடம் கற்க வேண்டும் தேமுதிக.. குறிப்பாக பிரேமலதா விஜயகாந்த்!
தேர்தல் அறிக்கையை தேமுதிக வெளியிடாதது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

சென்னை: எவ்வளவுதான் கேப்டனுக்காக தமிழக மக்கள் விட்டு கொடுத்து போவார்கள், எவ்வளவுதான் அவர் ஒருவருக்காக எல்லாவற்றையும் ஏற்று கொள்வார்கள்?
தேர்தல் அறிக்கை என்பது, தேர்தலின்போது மக்களின் ஓட்டுகளை பெற மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம் என்று ஒரு அரசியல் கட்சி தேர்தலுக்கு முன்னர் தருகின்ற ஒரு உறுதிமொழி சாசனம். அதுமட்டுமில்லை...
இந்த தேர்தல் அறிக்கை என்பதுதான் ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணியாகவும் விளங்குகிறது. அரசியல் கட்சிகள் எல்லாம் வாக்குறுதிகளை காப்பாற்றுகிறார்களோ இல்லையோ, தேர்தல் அறிக்கையை வெளியிடுவதை முக்கியமான அம்சமாக மட்டுமல்லாமல், கவுரவ பிரச்சனையாககூட கருதுகிறார்கள்.

ஆவல்
ஆனால் இப்படி எதுவுமே தேமுதிகவுக்கு இல்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருகாலத்தில் தேமுதிகவின் தேர்தல் அறிக்கை என்பது ரொம்ப பிரபலம். அனைத்து தரப்பு மக்களும் விஜயகாந்த் வெளியிடும் தேர்தல் அறிக்கையை பார்க்க ஆவலாக இருப்பார்கள். குறிப்பாக ரேஷன் பொருட்கள் எல்லாம் வீடு தேடி வரும் என்று சொன்னதை இன்னும் யாராலும் மறக்க முடியாது.

ஏன் வெளியிடவில்லை?
அப்படிப்பட்ட ஒரு கட்சி இன்றைக்கு எதற்காக தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. எல்லாவற்றிலும் தனக்கு போட்டியாக நினைத்த, பாமகவை இதிலும் போட்டியாக தேமுதிக நினைத்து கொள்ள வேண்டியதுதானே? "நாங்க என்ன பாமகவைவிட சளைத்தவர்களா? எங்களுக்கும் வட மாவட்டத்தில் செல்வாக்கு இருக்கு, நாங்க ஒரு காலத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்தவர்கள்" என்று இப்படி சொல்லி சொல்லியே ஒரு மாசம் கூட்டணி மற்றும் சீட் விஷயத்தில் காலங்கடத்தி கறார் காட்டியவர்கள், தேர்தல் அறிக்கையை மட்டும் ஏன் வெளியிடவில்லை.

பாமக பலம்
7 தொகுதியே என்றாலும் பாமக தேர்தல் அறிக்கை வெளியிடவில்லையா? அந்த தேர்தல் அறிக்கையில் ஒரு கட்சியின் பலம் தென்படுகிறது. அதுகூட வேணாம்.. இன்றைக்கு கட்சி ஆரம்பித்த கமல் தேர்தல் அறிக்கை வெளியிடவில்லையா?

சுதீஷ், பிரேமலதா
ஏற்கனவே தேமுதிக வலிமை இழந்து உள்ளது, தொண்டர்கள், நிர்வாகிகள் பலம் குறைந்துள்ளது, இதில் சுதீஷ், பிரேமலதா செய்த கூட்டணி சமாச்சாரத்தில் விஜயகாந்த்துக்கு இருந்த நல்ல பெயரையும் கெடுத்து மானத்தை விட்டார்கள். போதாக்குறைக்கு அவரது மகனின் வாய் காது தூரம் நீள்கிறது.

கவலை
இதில் விஜயகாந்த் இன்னும் மக்களை சந்தித்து பேச முடியாத நிலை. அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது என்றுகூட தெரிந்து கொள்ள நம்மால் முடியவில்லை. இன்னமும் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் விஜயகாந்த்தை நேசிக்கிறார்கள். அதனால்தான் அக்கட்சி ஒரு தேர்தல் அறிக்கையைகூட வெளியிடவில்லையே என கவலைப்படுகிறார்கள்.

4 தொகுதிகள்
இப்படி ஒரேயடியாக தேர்தல் அறிக்கையை புறக்கணித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்? கட்சிக்கு எப்படி குறைந்தபட்ச ஓட்டுக்களாவது விழும்? எதை நம்பி வாக்களிப்பார்கள்? இருக்கும் 4 தொகுதிகளில்2 பேர் அறிமுகமானவர்கள், 2 பேர் புது வேட்பாளர்கள். ஏற்கனவே தேமுதிக கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருக்கிறது.. இப்போதும் அதே நிலை தொடர்கிறது... இதற்கு காரணம் வேறு கட்சிகளோ, நபர்களோ இல்லை.. சாட்சாத் தேமுதிகவேதான்!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications