40 லிருந்து 25 கேட்டோம்.. கேட்டது கிடைத்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி.. தேமுதிக பிடிவாதம்
சென்னை: கேட்கும் தொகுதிகளை கொடுத்தால் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி என தேமுதிக தெரிவித்துள்ளது. இதன் மூலம் தேமுதிக வேறு கூட்டணிக்கு செல்லுமா இல்லை தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் தேமுதிக இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலை போன்று 41 தொகுதிகளை கேட்கிறது திமுக.
ஆனால் அதிமுகவோ 14 தொகுதிகள் தருகிறோம் என்கிறார்கள். இதனால் இவர்களுக்கிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

21 தொகுதிகள்
இந்த நிலையில் 25 தொகுதிகளை தேமுதிக கேட்கிறது. இதற்கும் அதிமுக மறுக்கிறது. மேலும் 21 தொகுதிகள், ராஜ்யசபா சீட்டை கேட்கிறது. ராஜ்யசபா சீட்டு கொடுக்கிறோம், ஆனால் 21 தொகுதிகள் முடியாது என அதிமுக மறுக்கிறது. இந்த நிலையில் அதிமுகவோ 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுவிட்டது.

தேமுதிக அலுவலகம்
இந்த தொகுதி பங்கீடு குறித்து தேமுதிக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 41 சீட்டுகளை கேட்டோம். ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு கொடுக்க வேண்டியிருப்பது என்று அதிமுக சொன்னதால் தற்போது 25 தொகுதி வரை கேட்டிருக்கிறோம்.

அதிமுகவில் கோரிக்கை
மேலும் ராஜ்யசபா சீட் கேட்டும் அதிமுகவில் கோரிக்கை வைத்துள்ளோம். அதிமுகவுடன் இதுவரை இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தேமுதிக கேட்கும் தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே அதிமுகவுடனான கூட்டணி தொடரும். எண்ணிக்கை உறுதியானால் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து தெரிவிக்கப்படும்.

தொகுதி பங்கீடு
அதிமுகவை விமர்சித்து சுதீஷ் பேசியதற்கும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். இதனால் 25 தொகுதிகள் கொடுத்தால் மட்டுமே அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிக்கும் என தெரிகிறது. இல்லாவிட்டால் தனித்து போட்டியா இல்லை வேறு கூட்டணிக்கு செல்லுமா என தெரியவில்லை.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications