முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தேமுதிக நிர்வாகிகள்.. எடப்பாடி மீட்டிங்குக்கு பிறகு நேரா அங்கதான்!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக நிர்வாகிகள் இன்று சந்தித்துள்ளனர். தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்த் நினைவு நாள் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ். முன்னதாக, தேமுதிக நிர்வாகிகள் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ், துணை பொதுச் செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2 ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு அழைப்பிதழ் வழங்க எல்.கே.சுதீஷ் சென்றிருந்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சுதீஷ் பேசுகையில், விஜயகாந்தின் குருபூஜையை பங்கேற்க அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார். மேலும் அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. அதைப் போலத்தான் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது, எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications