BREAKING NEWS LIVE: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தேமுதிக நிர்வாகி திடீர் ராஜினாமா
தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுடன் பொருளாளர் துரைமுருகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை: தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுடன் பொருளாளர் துரைமுருகன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தேமுதிக தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடன் லோக்சபா தேர்தலுக்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதிமுக, திமுக ஆகிய முக்கிய கட்சிகளுடன் பேசியது. இந்த நிலையில் தற்போது எந்த கட்சியுடனும் தேமுதிக கூட்டணி உடன்படிக்கை ஏற்படவில்லை. இதையடுத்து தற்போது தேமுதிக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக ஸ்டாலினுடன் துரைமுருகன் ஆலோசித்து வருகிறார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் விஜய் பவுல்ராஜா
அதிமுக, திமுக கட்சிகளுடன் ஒரே நேரத்தில் கூட்டணி பேச்சு நடத்தியதற்கு எதிர்ப்பு
விஜயகாந்த் நடிப்பை கண்டு இனி ஏமாற தயாராக இல்லை: விஜய் பவுல்ராஜா
நம்பியவர்களை அடகு வைத்து தேர்தல் கூட்டணி பேசாதீர்கள்: விஜய் பவுல்ராஜா
என்னிடம் பேச வந்தபோது என்னுடைய நிலையை சொன்னேன் - துரைமுருகன்
தனிப்பட்ட முறையிலான சந்திப்பு என்றால் நேற்றே மறுத்திருக்க வேண்டியதுதானே - துரைமுருகன்
மறுபடியும் அதிமுகவிடம் பேசுவதற்காக எங்களைப் பற்றிப் பேசுகிறார்கள் - துரைமுருகன்
தேமுதிக ரொம்ப நொந்து போயிருக்காங்க.. அவர்களைப் புண்படுத்த விரும்பலை - துரைமுருகன்
தனிப்பட்ட முறையில் பேச என்னிடம் எதுவும் இல்லை - துரைமுருகன்
அனகாபத்தூர் முருகேசன் யார் என்றே தெரியாது - துரைமுருகன்
சுதீஷ் மீது நான் வைத்திருந்த மரியாதையை அவரே குறைத்துக் கொண்டு விட்டார் - துரைமுருகன்
தேமுதிக நிர்வாகிகளை நான் முன்பின் பார்த்தது கூட கிடையாது - துரைமுருகன்
நாங்கள் முதலில் பாஜகவுடன் கூட்டணி குறித்தும் பேசினோம் - சுதீஷ்
பாஜகவினர் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால், நாங்களும் அதிமுகவுடனும் பேசினோம் - சுதீஷ்
பாமகவுடன் கூட்டணி வைத்த அதிமுக, எங்களுடனும் ஒப்பந்தம் செய்திருக்கலாம் - சுதீஷ்