NDA கூட்டணிக்கு தேமுதிக வருதா? தேதியைச் சொன்ன நயினார் நாகேந்திரன்.. என்ன மேட்டர்?
சென்னை: "என்.டி.ஏ கூட்டணியில் தேமுதிக இணையுமா? என்ற கேள்விக்கு "1 ஆம் தேதி பார்க்கலாம்" என நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பொதுக்கூட்டம் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் நயினார் நாகேந்திரனின் இந்த பதில் அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை. திமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது. இதனால் திமுக கூட்டணிக்கு செல்லுமா? இல்லை மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம்பெறுமா? என எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தேமுதிகவை பொறுத்தவரை, இரட்டை இலக்கத்தில் சட்டசபை தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா இடம் உள்ளிட்டவற்றை பிரேமலதா விஜயகாந்த் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. மேலும், என்டிஏ கூட்டணியில் மத்திய அமைச்சர் பதவியையும் தேமுதிக கேட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என அக்கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா மையத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம் பெறலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திமுக கூட்டணி தான் வலுவாக இல்லை. எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல கூட்டணி கட்சிகளால் பாஜக பலமாக உள்ளது. இபிஎஸ் தலைமையில் நல்லாட்சி மலரும்" என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
என்.டி.ஏ கூட்டணியில் தேமுதிக இணையுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "மார்ச் 1 ஆம் தேதி பார்க்கலாம்" என்று பதில் அளித்துள்ளார். நயினார் நாகேந்திரனின் இந்த பதில் அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்.எடி.ஏ பொதுக்கூட்டம் வரும் மார்ச் 1ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அப்போது கூட்டணி தொடர்பான அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் மோடி மார்ச் 1 ஆம் தேதி தமிழகம் வர உள்ள நிலையில், அப்போது மதுரையில் நடக்கும் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் மேடை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
-
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு












Click it and Unblock the Notifications