ரஜினி மீது அன்புமழை பொழியும் தேமுதிக... அரசியல் மாற்றம் உறுதி என பிரேமலதா பேச்சு
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நல்ல மனிதர் என்றும், அவர் மீது தேமுதிக மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினியை இன்று இவ்வளவு தூரம் புகழும் பிரேமலதா விஜயகாந்த் இதற்கு முன்பு பல நேரங்களில் அவரை பற்றி பேச்சை எடுத்தாலே செய்தியாளர்கள் மீது சிடுசிடுவென எரிந்து விழுந்திருக்கிறார்.
ரஜினி முதல்வர் வேட்பாளர் பந்தயத்தில் இருந்து ஒதுங்குவதாக நேற்று அறிவித்ததும் அவரை போற்றி புகழ்ந்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

பிரேமலதா பேச்சு
சென்னை பூந்தமல்லியில் இன்று நடைபெற்ற தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், வரும் 2021-ம் ஆண்டு தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழும் என கூறினார். மேலும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் மூலம் நல்ல முடிவுகள் வெளியாகும் என்றும் மாற்றம் நிகழ்வது உறுதி எனவும் அதிமுகவை சூசகமாக விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார். அதிமுக ராஜ்யசபா சீட் கொடுக்காத நிலையில், அக்கட்சியை பற்றி என்ன பேசுவார் என செய்தியாளர்கள் எதிர்பார்த்த நிலையில் பிரேமலதா பொறுமைகாத்தது குறிப்பிடத்தக்கது.

மரியாதை
நடிகர் ரஜினிகாந்த் நல்ல மனிதர் என்றும், அவர் மீது தங்கள் குடும்பமும், தேமுதிகவும் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இது தான் மாற்று அரசியலுக்கு சரியான நேரம் என ரஜினி கூறியதை சுட்டிக்காட்டிய அவர், 2021- ல் அரசியல் மாற்றம் ஏற்படும் எனத் தெரிவித்தார். இதில் ஆச்சரியப்பட வேண்டிய விவகாரம் என்னவென்றால், எப்போதும் ரஜினியை பற்றி விமர்சிக்கும் வகையில் கருத்து கூறி வந்த பிரேமலதா இன்று புகழ்ந்து பேசியது தான்.

திடீர் கரிசனம்
ரஜினி அரசியல் கட்சி தொடங்கி முதல்வர் வேட்பாளராக களமிறங்கினால் அது தங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என நினைத்தது தேமுதிக தலைமை. இதனிடையே நேற்று ரஜினி தனது நிலைப்பாட்டை அறிவித்ததை அடுத்து அவரை நல்ல மனிதர் என இன்று பேசியிருக்கிறார் பிரேமலதா. இதே பிரேமலதா விஜயகாந்த், சில நாட்களுக்கு முன்புவரை ரஜினி முதலில் களத்திற்கு வரவேண்டும், மக்களுக்கு குரல் கொடுக்க வேண்டும், என்றெல்லாம் பலமுறை தெரிவித்திருக்கிறார். மேலும், ரஜினியும் கமலும் இணைந்து நடிகர் சங்கத் தேர்தலை கூட சந்தித்ததில்லை என அண்மையில் கூட விஜயபிரபாகரன் விமர்சித்திருந்தார்.

புதிய கூட்டணி
தற்போதைய சூழலில் திமுக மீதும், அதிமுக மீதும் தேமுதிக மிகுந்த அதிருப்தியிலும் கோபத்திலும் உள்ளது. இதனால் அந்த இரு கட்சிகளுடன் இணைந்து தேமுதிக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் என்பது சந்தேகம் தான். இதனால் ரஜினியுடன் கைகோர்த்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க விரும்புகிறது தேமுதிக. அதற்கான முன்னோட்டமாக தான் அரசியல் மாற்றம், ரஜினி நல்லவர் என்றெல்லாம் பிரேமலதா பேசியதை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications