எடப்பாடி முதல்வர்.. திருமா துணை முதல்வர்.. அதிமுக - பாஜக கூட்டணி உருவானால்.. என்ன ஆகும்? தகவல்
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, பரம எதிரிகளாகக் கருதப்படும் திமுகவும் அதிமுகவும் கரம் கோர்க்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. தவெக ஆட்சியைப் பிடிப்பதைத் தடுக்க, திமுக வெளியிலிருந்து அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அடுத்தது யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் தமிழக அரசியல் களம் பெரும் குழப்பத்திலும், பரபரப்பிலும் ஆழ்ந்துள்ளது. கடந்த மே 4-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளின்படி, தமிழகத்தின் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான 'மேஜிக் நம்பர்' ஆன 118 இடங்கள் கிடைக்கவில்லை.
ஆளுநரின் கிடுக்கிப்பிடி கேள்வி: திணறிய தவெக
சட்டமன்றத்தில் 107 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், நேற்று ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரைச் சந்தித்த அவர், தமக்கு ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இருப்பினும், தவெக - காங்கிரஸ் கூட்டணியின் மொத்த பலம் 112-ஆக மட்டுமே உள்ளது. இதில் சபாநாயகர் பதவியைக் கழித்தால், அவையில் இக்கூட்டணியின் பலம் 111 மட்டுமே. ஆட்சியமைக்க இன்னும் 7 இடங்கள் தேவைப்படும் நிலையில், அந்த இடங்களை எவ்வாறு நிரப்பப் போகிறீர்கள்? ஆதரவு தரும் மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் யார்? என்ற ஆளுநரின் கேள்விகளுக்கு தவெக தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, "சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை" எனக் கூறி, விஜய்யின் கோரிக்கையை இரண்டாவது முறையாக ஆளுநர் மாளிகை நிராகரித்துள்ளது.
திமுக - அதிமுக ரகசிய வியூகம்: ஈபிஎஸ் முதல்வரா?
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, பரம எதிரிகளாகக் கருதப்படும் திமுகவும் அதிமுகவும் கரம் கோர்க்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. தவெக ஆட்சியைப் பிடிப்பதைத் தடுக்க, திமுக வெளியிலிருந்து அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய தகவல்களின்படி, இந்த ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி (EPS) மீண்டும் முதல்வராகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும், விசிக தலைவர் திருமாவளவனுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. 59 இடங்களை வைத்துள்ள திமுக, அமைச்சரவையில் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் பட்சத்தில், 47 இடங்களை வைத்துள்ள அதிமுக மற்றும் சிறிய கட்சிகளின் பலம் 106-ஆக உயரும்.
எண்ணிக்கை விளையாட்டில் தொடரும் சிக்கல்
இந்த புதிய கூட்டணியிலும் 'மேஜிக் நம்பர்' சவாலாகவே உள்ளது. திமுகவின் ஆதரவுடன் அதிமுக (106), விசிக (2), கம்யூனிஸ்ட் கட்சிகள் (4), ஐயுஎம்எல் (2) மற்றும் தேமுதிக (1) என அனைத்தும் இணைந்தாலும் மொத்த பலம் 115 மட்டுமே வருகிறது. அமமுக 1 உள்ளது. ஆனால் பெரும்பான்மைக்கு இன்னும் 2 இடங்கள் தேவைப்படுகின்றன. இதில் பாமக இணைந்தால் 118-ஐத் தொட முடியும் என்றாலும், பாமக உள்ளே வந்தால் விசிக வெளியேறும் சூழல் உருவாகும். மறுபுறம் சித்தாந்த ரீதியாக பாஜகவுடனும், தவெக உடன் உள்ள காங்கிரஸ் உடனும் இவர்களால் கரம் கோர்க்க முடியாது. இதனால் விசிக - பாமக இடையே சமாதானம் செய்யப்படும்.
தொண்டர்கள் கொந்தளிப்பு - ஆளுநரின் மௌனம்
எந்த அணியும் பெரும்பான்மையை உறுதி செய்ய முடியாததால், ஆளுநர் யாரையும் ஆட்சியமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இது தவெக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "மக்களின் தீர்ப்பை மதிக்காமல் அரசியல் சூழ்ச்சிகள் நடப்பதாக" அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி அமையுமா அல்லது ஆளுநர் ஆட்சிக்கு வழிவகுக்கப்படுமா என்பது அடுத்த 48 மணி நேரத்தில் தெரியவரும். அதுவரை தமிழக அரசியலில் நிலவும் இந்த 'சதுரங்க வேட்டை' ஓயப்போவதில்லை.












Click it and Unblock the Notifications