திடுதிப்பென ‘மயான அமைதி’யில் தமிழ்நாடு பாஜக- 'மூச்’விட மறுக்கும் அதிமுக- மீண்டும் முதலில் இருந்தா?
சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனாலும் அதிமுக, பாஜக தலைவர்கள் இருதரப்பும் கனத்த மவுனமாக இருப்பதால் 'கூட்டணி முறிவு' என்பது அரசியல் நாடகமா? என்கிற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கடுமையாக விமர்சனங்களால் அதிமுக தலைவர்கள் கொந்தளித்தனர். முதலில் ஜெயலலிதா, பின்னர் பேரறிஞர் அண்ணாவை விமர்சித்தார் அண்ணாமலை. இதற்கு அதிமுக தரப்பில் பதிலடி தரப்பட்டது.

அதிமுக விலகல் அறிவிப்பு:இருப்பினும் அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்தது. இந்நிலையில் செப்டம்பர் 18-ந் தேதி, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் பிறகு சமாதானமாக சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதன் பிறகும் அண்ணாமலை தரப்பு உக்கிரமாக இருந்தது. இதனால் மீண்டும் அதிமுக- பாஜக கூட்டணி இல்லை என அறிவிக்கப்பட்டது. சென்னையில் நேற்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது.
கொண்டாட்டமும் மவுனமும்: இதனை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதேபோல மதுரை உள்ளிட்ட இடங்களில் பாஜகவினரும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதேநேரத்தில் இருதரப்பு தலைவர்களும் கூட்டணி முறிந்த பின்னர் கூட காரசாரமான கருத்துகளை தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.
பாஜக பேச மறுப்பு: தமிழ்நாட்டில் ஒரு பிரதான கட்சி, கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூட எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது; தேசிய தலைமை முடிவெடுக்கும் என்றார்.தமிழ்நாடு பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி, அதிமுகவுக்கு எதிராக பதிவிட்டிருந்த எக்ஸ் தள பதிவை கூட நீக்கிவிட்டார். டெல்லி பாஜக தலைவர்களும் கூட பட்டும் படாமலுமே பதில் சொல்லி வருகின்றனர்.
பெரும் அமைதி: அதேபோல சென்னை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னர் அதிமுக தரப்பிலும் பாஜகவை கடுமையாக விமர்சித்து எந்த தலைவரும் பேசவில்லை. இது தொடர்பாக பேசவும் மறுத்து வருகின்றனர்.
தோல்வி அச்சத்தால் நாடகமா?: இதனால் அதிமுக -பாஜக கூட்டணி முறிவு என்பது அப்பட்டமான ஒரு நாடகமாக இருக்கலாமோ? என்கிற கேள்வியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் நிச்சயம் அதிமுகவுக்கு தோல்விதான் என்பதை உணர்ந்து கொண்டு இப்போது கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்களோ என்கிற கேள்வியையும் சில தலைவர்கள் எழுப்பி உள்ளனர்.
திமுக கூட்டணியை சிதைக்கும் முயற்சி?: இன்னொரு பக்கம், பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டதால் திமுக தலைமையிலான வலிமையான கூட்டணியை உடைத்து அதன் வெற்றி வாய்ப்பை சிதைக்கக் கூடிய வாய்ப்பு அதிமுகவுக்கு கிடைத்திருக்கிறது. இதுவே பாஜகவின் மறைமுகமான திட்டமாகவும் இருக்கலாம் என்கிற சந்தேகத்தையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.
மீண்டும் கூட்டணியா?: தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாடு பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் பெரும் அமைதியில் இருப்பது ஏன் என்பதுதான் முக்கியமான கேள்வியாக உருவெடுத்திருக்கிறது. ஒருவேளை டெல்லி மேலிடம் மீண்டும் தலையிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவை இணைத்துக் கொள்ளக் கூடிய சாத்தியங்கள் உருவாகலாம்; அதையும் மறுப்பதற்கில்லை என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.. ஆக மறுபடியும் முதலில் இருந்தா?
-
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்?












Click it and Unblock the Notifications