20 பாயிண்ட்! 1020 நாட்கள்! திமுக அனுப்பிய பயங்கர லிஸ்ட்.. ஆளுநர் ரவி பற்றிய அந்த "பைல்".. என்னாச்சு?
சென்னை: திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆளுநர் ஆர். என் ரவியை நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் மனு அளித்து உள்ளது. இந்த மனுவில் முக்கியமான கோப்பு ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில ஆளுநராக ஆர். என் ரவி பதவி ஏற்றதில் இருந்தே சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முக்கியமாக இந்து மதம் குறித்தும், சனாதனம் குறித்தும் ஆளுநர் ரவி தொடர்ந்து பேசி வருவது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
நியமன பதவியில் இருந்து கொண்டு, ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதாக திமுக குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது. இந்த மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்தான் விவகாரம் தற்போது டெல்லிக்கு சென்றுள்ளது.

நீக்கம்
அதன்படி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து ஆளுநர் ஆர். என் ரவியை நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் மனு அளித்து உள்ளது. இந்த மனுவில் முக்கியமான கோப்பு ஒன்றும் இணைக்கப்பட்டு உள்ளது. ஆளுநரை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து 40 எம்பிக்களின் கையெழுத்தை திமுக பெற்றுள்ளது. இதில் கிட்டத்தட்ட லோக்சபா, ராஜ்ய சபா எம்பிக்கள், கட்சி தலைவர்கள் சேர்த்து 40க்கும் அதிகமானோர் கையெழுத்து போட்டுள்ளனர்.

ஒருமித்த குரல்
திமுக, காங்கிரஸ், மதிமுக, மமக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தவாக, கொமதேக, திக கட்சிகள் எல்லாம் இதில் ஒருமித்த குரல் கொடுத்து உள்ளன. இந்த கட்சிகளில் இருக்கும் எம்பிக்கள் மட்டும் தற்போது ஆளுநருக்கு எதிரான இந்த மனுவில் கையெழுத்து போட்டுள்ளனர். ஆனால் வெறுமனே இவர்கள் கடிதம் மட்டும் அனுப்பவில்லை. அதோடு சேர்த்து முக்கியமான கோப்பு ஒன்றையும் அனுப்பி உள்ளனர். அந்த கோப்பில் ஆளுநர் தொடர்பான முக்கியமான லிஸ்ட் ஒன்று இடம்பெற்று உள்ளது.

லிஸ்ட்
அந்த லிஸ்டில், ஆளுநர் கிடப்பில் போட்டு இருக்கும் 20 மசோதாக்கள் பட்டியல்கள் இடம்பெற்று உள்ளன. மீன்வள பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா தொடங்கி விலங்குகள் பல்கலைக்கழகம், சட்டத்துறை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக மசோதாக்கள் உள்ளன. இதில் 10 மசோதாக்கள் பல்கலைக்கழக நியமன மசோதாக்கள்தான். அதாவது துணை வேந்தரை ஆளுநர் அல்லாமல் முதல்வர் நியமிக்கும் மசோதாக்கள். இந்த 10 மசோதாக்களும் கிடப்பில் உள்ளன. அதிலும் மீன்வள பல்கலைக்கழகம் தொடர்பான மசோதா 1020 நாட்களாக கிடப்பில் உள்ளது.

ஆளுநர்
அதாவது முந்தைய ஆளுநரிடம் இருந்தே அந்த மசோதா கிடப்பில் உள்ளது. இது போக ஆன்லைன் சூதாட்ட மசோதாவும் கிடப்பில் உள்ளது. மீண்டும் மீண்டும் திருத்தங்கள் செய்து அனுப்பப்பட்ட சட்ட பல்கலைக்கழக மசோதாவும் இதேபோல்தான் கிடப்பில் இருக்கின்றது. இது அனைத்தையும் மொத்தமாக லிஸ்ட் போட்டு திமுக கூட்டணி தங்கள் மனுவில் டெல்லிக்கு அனுப்பி உள்ளது. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட தேதி அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பொதுவாக மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கால அவகாசம் இல்லை. ஆனால் முடிந்தளவு வேகமாக அனுப்ப வேண்டும் என்று சட்டம் சொல்கிறது இதை அவர் மீறிவிட்டதை சுட்டிக்காட்டும் விதமாக இந்த மனுவை தமிழ்நாடு திமுக கூட்டணி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளது.
-
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
விசிகவுக்கான 8 தொகுதிகள் முடிவாகிவிட்டது.. ஸ்டாலின் முறையாக அறிவிப்பார்.. திருமாவளவன் பேட்டி! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
12.12 மணிக்குத்தான் தமாகா வேட்பாளர்களை அறிவிப்பேன்! ஜி.கே.வாசன் சொன்னதற்கான காரணம் என்ன? -
‘நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்போம்’ கிருஷ்ணசாமி அதிரடி அறிவிப்பு., கிலியில் எடப்பாடி -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு











Click it and Unblock the Notifications