Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்சியில் பங்கு கேட்பது எப்படிங்க சதி ஆகும்? ஸ்டாலின் கருத்தால் கொந்தளிக்கும் மாணிக்கம் தாகூர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: (திமுக காங்கிரஸ் கூட்டணி: DMK Congress alliance) தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்? என்று மாணிக்கம் தாகூர் எம்பி கேள்வி எழுப்பியிருக்கிறார். நேற்று தமிழகத்திற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்றும், திமுக காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க சிலர் சதி செய்துவருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அதற்கு, 'கூட்டணி ஆட்சியா, ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும், 2006 தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் தீர்ப்பை நாம் செயல்படுத்தாததும் நம் (காங்கிரசின்) தவறு.. என்று மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார்.

DMK Congress alliance

திமுக காங்கிரஸ் கூட்டணி

திமுக காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து சலசலப்புகள் இருந்து வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பங்கு இல்லை என்பதை திட்டவட்டமாகவே கூறிவிட்டார். அதே சமயத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும், வரும் தேர்தலில் திமுக காங்கிரஸ் சேர்ந்தே செயல்படும் என்றும் தெளிவுப்படுத்திவிட்டார்.

இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது முதல்வர் ஸ்டாலினின் தனிப்பட்ட கருத்து, கூட்டணி ஆட்சியா இல்லையா என்பதை ராகுல் காந்தி, கார்கே ஸ்டாலினுடன் பேசி முடிவு எடுப்பார்கள். திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கிறது என்றும் சொல்லிவிட்டார்.

ஒரு கட்சி ஆட்சியா?

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் ஆட்சியில் பங்கு கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக தவெக இந்த முறை களத்தில் இருப்பதால் அதனை காரணம் காட்டி திமுகவிடம் அதிக தொகுதிகளை பெறுவதற்கும், ஆட்சியில் பங்கு கோரிக்கையும் எழுப்பினர்.

இதற்கு ஆட்சியில் பங்கு கிடையாது என்பதை திமுக அமைச்சர்கள் மறைமுகமாக பதில் அளித்து வந்தனர். இந்த நிலையில் தான் ஸ்டாலினும் இதனை சொல்லி இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைத்த நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என பதில் அளித்தார்.

2006 சட்டசபை தேர்தல்

மேலும் தமிழகத்தில் 2006 சட்டசபை தேர்தலின் போது மக்கள் தீர்ப்பை நாம் (காங்கிரஸ்) செயல்படுத்தாது தவறு என கூறியிருந்தார். அந்த தேர்தலில் திமுக பெரும்பானமை பெறவில்லை. திமுக வெறும் 96 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் 34 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் காங்கிரஸ் துணையுடனேயே திமுக ஆட்சி அமைத்தது.

இதனை மேற்கோள் காட்டியே மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார். இதற்கு திமுக தரப்பில், திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை, ஒருசிலர் கூட்டணியை பிரிக்க சதி செய்து வருவதாக கூறியிருந்தனர். முதல்வர் ஸ்டாலினும் கூட்டணியில் சலசலப்பு என்பது கூட்டணியை முறிக்க நினைக்கும் திட்டமிட்ட சதி என கூறியிருந்தார்.

அது எப்படி சதியாகும்?

இதற்கு பதில் அளிக்கும் வகையில் தான் தற்போது மாணிக்கம் தாகூர் ட்விட் பதிவிட்டுள்ளார். "தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?" என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் அடிமட்ட அளவில் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்துக் கொண்டே வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+