புரட்சி வரலாறுகளை பேசி பேசியே வளர்ந்த திமுக.. முதல்வர் ஸ்டாலின் பேசியது தெரியாமல் விமர்சித்த விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "உலக வரலாறு, தலைவர்கள் கோட்ஸ் என எம்பி 3 ஆடியோ போல, கொந்தளிப்பாக பேசுவது அரசியல் இல்லை" என தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாட்டில் அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய் பேசியிருந்தார். அதற்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், "திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­பதே, பேசிப் பேசி வளர்ந்த கழ­கம்! அந்­தக் காலத்­தில், பேசிப் பேசியே ஆட்­சியை பிடித்த இயக்கம்" என்றுதான் திமுகவை சொல்வார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய், பாஜக மற்றும் திமுகவை சித்தாந்த, அரசியல் எதிரிகளாக அறிவித்தார். மேலும் உலக வரலாறு, தலைவர்கள் கோட்ஸ் என எம்பி 3 ஆடியோ போல, கொந்தளிப்பாக பேசுவது அரசியல் இல்லை எனவும் நடிகர் விஜய் கூறியிருந்தார்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay dmk

விஜய் இப்படி பேசுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக என்பதே பேசிப் பேசி வளர்ந்த இயக்கம் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

சென்னை நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­பதே, பேசிப் பேசி வளர்ந்த கழ­கம்! அந்­தக் காலத்­தில், பேசிப் பேசியே ஆட்­சியை பிடித்த இயக்­கம்" என்று நம்­மு­டைய இயக்­கத்­தைப் பற்­றிச் சொல்­லு­வார்­கள். ஆனால், அவர்­கள் சொல்ல மறந்­தது, இல்லை- சொல்­லா­மல் தவிர்ப்­பது என்­ன­வென்­றால், நாம் பேசிய பேச்­செல்­லாம் வெறும் அலங்­கார அடுக்­கு­மொழி அல்ல, உல­கம் முழு­வ­தும் நடந்த புரட்சி வர­லா­று­க­ளைப் பேசி­னோம்; உலக அறி­ஞர்­க­ளின் வர­லாற்­றைப் பேசி­னோம்; நம் நாட்­டில் நடை­மு­றை­யில் இருந்த கொடு­மை­க­ளைப் பேசி­னோம்; மூட­நம்­பிக்கை - பிற்­போக்­குத் தனம் - பெண்­ண­டி­மைத்­த­னம் - இவை­க­ளுக்கு எதி­ரா­கப் பேசி­னோம்.

ரத்­தம் கக்­கிய நிலை­யி­லும் இந்­தச் சமூ­கத்­தின் இழிவு நீங்­கப்பேசி­னார் - அஞ்­சா­நெஞ்­சன் பட்­டுக்­கோட்டை அழ­கிரி அவர்­கள்! 95 வய­தி­லும் மூத்­தி­ர­வா­ளி­யைச் சுமந்து கொண்டு, வலி­யைத் தாங்க முடி­யாத அள­விற்­குப் பேசி­ய­வர் - தந்தை பெரி­யார் அவர்­கள்! சாக்­ர­டீஸ், தமி­ழர்­கள் மீதான டெல்­லி­யின் பார­பட்­சம் என்று அனைத்து தலைப்­பு­க­ளி­லும் மடை­தி­றந்த வெள்­ளம்­போல் பேசி­னார் - பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள்! அண்ணா பரம்­பரை என்றே சொல்­லும் அள­விற்கு இன்­றைக்கு வரைக்­கும், அண்ணா உரு­வாக்­கிய மேடைத்­த­மிழ் பரம்­ப­ரை­யைச் சேர்ந்த பேச்­சா­ளர்­கள் இருக்­கி­றார்­கள்.

சங்க இலக்­கி­யம், சிலப்­ப­தி­கா­ரம், திருக்­குறள் என்று பழந்­த­மிழ் இலக்­கி­யங்­களை அழ­கு­த­மி­ழில் பாமர மக்­க­ளுக்­கும் கொண்டு சென்­றார் நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர்அவர்­கள். சமீ­பத்­தில் தனி­யார் தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்­றில் தலை­வர் கலை­ஞர் ராஜா ராணி படத்­தில் எழு­திய வச­னத்தை ஒரு போட்­டி­யா­ளர் பேச, அது சமூக வலைத்­த­ளங்­க­ளில் வைரல் ஆனது! அந்­தப் படத்­தில் சாக்­ர­டீஸ் ஓரங்­க­நா­ட­கத்­தில் நம் இயக்­கம் அடுக்­கு­மொ­ழி­யால் வளர்ந்­தது அல்ல; அறி­வார்ந்த கருத்­து­க­ளால் வளர்ந்த இயக்­கம் என்று தலை­வர் கலை­ஞர் எழுதி இருப்­பார்! நாவ­லர் - பேரா­சி­ரி­யர் - சொல்­லின் செல்­வர் - சிந்­த­னைச் சிற்பி – தத்­து­வ­மேதை என்று நம் இயக்­கத்­தில் இருக்­கும் தலை­வர்­க­ளின் பெயர்­களே, அவர்­கள் எப்­ப­டி­பட்ட ஆற்­றல்­மிக்க பேச்­சா­ளர்­க­ளாக இருந்­தார்­கள் என்று சொல்­லும்! பேச்­சுக்­கலை மிக மிக வீரி­ய­மிக்­கது! சமூ­கத்­தில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூடி­யது! “சொல்­வன்மை மிக்­க­வனை வெல்­வது அரிது” என்று வள்­ளு­வரே சொல்­லி­யிருக்­கிறார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+