தி.மு.க பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை.. 'சாவுக்கு காரணம் மனைவிதான்'..உருக்கமான வீடியோ.. மனைவி கைது
சென்னை: சென்னையில் தி.மு.க பிரமுகர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மனைவியை போலீசார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை முகமது உசேன் தெருவை சேர்ந்தவர் வித்யா குமார்(34).
Recommended Video
இவர் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். மேலும், தி.மு.க பிரமுகரான இவர் 115-வது வார்டு தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார்.

தொடர்ந்து தகராறு
இவருக்கும் மணலி பெரிய சேக்காடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நிஷாந்திக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்தது முதல் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு ஏற்படும்போதெல்லாம் பெற்றோர் வந்து சமாதானம் செய்வார்கள். ஆனால் அதன்பிறகு தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது.

போலீசில் புகார்
ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் இது தொடர்பாக நிஷாந்தியின் தாய் சம்யுக்தா அண்ணா சாலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் அழைத்து, சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இதன்பிறகு நிஷாந்தியும் போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வித்யா குமார் இல்லாத நேரத்தில் அவரது பெற்றோரிடம் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை
ஏற்கனவே மனைவி தன் மீது புகார் கொடுத்ததால் வித்யாகுமார் விரக்தியில் இருந்து வந்தார். போலீசார் அவரது பெற்றோரை பேசியதால் மேலும் வேதனை அடைந்தார். தொடர்ந்து மனமுடைந்த நிலையில் இருந்து வந்த வித்யாகுமார், கடையில் லக்ட்ரிக்கல் பொருட்கள் வைக்கும் குடோனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

உருக்கமான வீடியோ
மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தன் சாவுக்கு காரணம் நிஷாந்திதான் என கடிதம் எழுதி வைத்திருந்ததாக தெரிகிறது. மேலும் வித்யாகுமார் இறப்பதற்கு முன்பு வீடியோ ஒன்றும் வெளியிட்டு இருந்தார், அதில், திருமணம் முடிந்த 9 மாதத்தில் 6 மாதம் வாழ்க்கை நன்றாக போனது. அதன்பிறகு மனைவி நிஷாந்தி, அவரது உறவினர்கள் என்னை கடுமையாக பேசினார்கள். கணவன் என்றும் பாராமல் மனைவி நிஷாந்தி என்னை திட்டி அடிப்பார்.

மனைவி கைது
அவரது அக்கா, மாமா பேச்சை கேட்டுகொண்டு என்னை வாழ விடாமல் கொடுமை செய்தார் மனைவி நிஷாந்தி. எனது சாவுக்கு காரணம் நிஷாந்தி, அவரது அக்கா, மாமா ஆகியோர்தான். அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுங்கள்'' என்று உருக்கமாக பேசி இருந்தார். இந்த வீடியோவை பார்த்த போலீசார், கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக நிஷாந்தியை கைது செய்தனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications