செப்டம்பர் 17ஆம் தேதி வேலூரில் திமுக முப்பெரும் விழா! அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு 'கலைஞர்' விருது!
சென்னை: செப்டம்பர் 17ஆம் தேதி வேலூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறும் என அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதேபோல் திமுக முப்பெரும் விழாவை ஒட்டி விருது பெறுபவர்களின் பட்டியலையும் அறிவித்துள்ளது. அந்த வகையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது தரப்படவுள்ளது.

மேலும், இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா - தி.மு.க. பவளவிழா ஆண்டு, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் வேலூரில் நடைபெறும் . தி.மு.கழக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான
பெரியார் விருது - மயிலாடுதுறை கி.சத்தியசீலன் அவர்கட்கும்
அண்ணா விருது -மீஞ்சூர் க.சுந்தரம் அவர்கட்கும்
கலைஞர் விருது - ஐ.பெரியசாமி அவர்கட்கும்
பாவேந்தர் விருது -தென்காசி மலிகா கதிரவன் அவர்கட்கும்
பேராசிரியர் விருது -பெங்களூர் ந.இராமசாமிஅவர்கட்கும் வழங்கப்படும்.''












Click it and Unblock the Notifications