நான் அப்படி என்ன கேட்டுட்டேன்? லெட்டரை தப்பாக அனுப்பிய சு.சாமி? விட்டு விளாசும் திமுக புள்ளி! பரபர!
சென்னை: திமுக கட்சியை தேர்தல் ஆணையம் தங்கள் பதிவில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி எழுதிய கடிதத்திற்கு திமுகவினர் சரமாரி பதிலடி கொடுத்து வருகின்றனர் .
திமுக கட்சியை தேர்தல் ஆணையம் தங்கள் பதிவில் இருந்து நீக்க வேண்டும், அவர்களின் சின்னத்தை பறிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று முதல் நாள் திமுகவிற்கு எதிராக டெல்லி தேர்தல் அலுவலர் மிசோவிற்கு கடிதம் எழுதி இருந்தார்.
அதில், திமுக செயலாளர் தேர்தல் ஆணைய விதிகளை மீறிவிட்டார். அதனால் கட்சி அங்கீகாரத்தை நீக்க வேண்டும்.

பிராமணர்கள்
பிராமணர்களை அழித்தொழிக்க வேண்டும். அவர்களை இன ஒழிப்பு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். திராவிட இயக்கத்தை தொடங்கிய பெரியாரின் கொள்கை அது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதனால் பிராமணர்கள் தமிழ்நாட்டில் தங்கள் வாக்கு உரிமையை செலுத்த முடியாத நிலை கூட ஏற்படலாம். இதை பயன்படுத்தி திமுக பல்வேறு தொகுதிகளில் வெற்றிபெற திட்டமிடுகிறது. இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்.திமுகவின் அங்கீகாரத்தை பறித்து, சின்னத்தை முடக்க வேண்டும் என்று சு. சாமி குறிப்பிட்டார்.

சுப்பிரமணியன் சாமி
சுப்பிரமணியன் சாமியின் இந்த கடிதத்தை திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். திமுக ஆளும் கட்சியாக இருக்கிறது. திமுகவை பாஜகவால் களத்தில் எதிர்க்க முடியவில்லை. கொள்கை ரீதியாக திமுகவை பாஜகவால் எதிர்க்க முடியவில்லை. அதனால் ஏதாவது காரணம் சொல்லி திமுகவின் அங்கீகாரத்தை பறிக்க பாஜகவின் சுப்பிரமணியன் சாமி முயன்று வருகிறார். இதெல்லாம் நடக்காது என்று திமுகவினர் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

ராஜிவ் காந்தி
இந்த நிலையில் திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜிவ் காந்தி சுப்பிரமணியன் சாமியை விமர்சனம் செய்துள்ளார். அதில், நான் என்ன தப்பா கேட்டேன்!! இந்திய தேர்தல் ஆணையருக்கு அனுப்ப வேண்டிய புகார் கடிதத்தினை டெல்லி மாநில தேர்தல் துணை ஆணையருக்கு தவறுதலா அனுப்பி இருக்கீங்க சரியான முகவரிக்கு அனுப்புங்க என்று தானே சரியான முகவரி கொடுத்தேன்!!, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

உரிமம் ரத்து
பொதுவாக கட்சியின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் போன்ற புகார்களுக்கு தலைமை தேர்தல் ஆணையருக்குதான் கடிதம் எழுதுவார்கள். அல்லது அந்த கட்சியின் மாநிலத்தில் உள்ள தேர்தல் அலுவலருக்கு கடிதம் எழுதுவார்கள். ஆனால் சுப்பிரமணியன் சாமி, டெல்லி தேர்தல் அலுவலர் மிசோவிற்கு கடிதம் எழுதி உள்ளார். இதை பலரும் விமர்சனம் செய்து வருகிறார். திமுக ராஜிவ் காந்தியும் இதை குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications