போராட்ட களமாக மாறிய தமிழகம்..திமுகவுக்கு இது தான் இறுதி தேர்தல்! அதிரடியாகப் பேசிய எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுக்கு இது தான் இறுதி தேர்தல், கடந்த தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை எனவும், இந்த தேர்தலுடன் மக்கள் திமுகவுக்கு விடை கொடுத்து விடுவார்கள் என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை சூளை பகுதியில் ஜெயின் சமூகத்தினரின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜெயின் சமூக பாரம்பரியம் படி எடப்பாடி பழனிசாமிக்கு தலையில் சாபா கட்டப்பட்டது.

Edappadi Palaniswami AIADMK Edappadi Palaniswami

அதனை தொடர்ந்து மணமக்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மோதிரம் மாற்றிக் கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி," திமுகவுக்கு இது தான் இறுதி தேர்தல், கடந்த தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை.

தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போராட்டங்கள் நடைபெறுகிறது. தமிழகமே போராட்ட களமாக மாறிவிட்டது. திமுக மக்கள் வெறுப்பை சம்பாதித்துள்ளது. இந்த தேர்தலுடன் மக்கள் திமுகவுக்கு விடை கொடுத்து விடுவார்கள்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+