இதென்னடா திமுகவுக்கு வந்த சோதனை.. பிரசாந்த் கிஷோரை அழைத்ததால் புதிய குடைச்சல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோரை திமுக அழைத்தது போதும்.. திரும்பிய திசையெல்லாம் விமர்சனங்கள் என திமுக படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
திமுகவில் கருணாநிதி ஆரோக்கியத்துடன் செல்வாக்கு செலுத்திய காலத்தில் முன்னணி நிர்வாகிகள், மூத்த தலைவர்களை அரவணைத்து ஆலோசித்து அதற்கேற்ப தேர்தல் வியூகங்களை வகுத்து செயல்படுவது வழக்கம். ஆனால் திமுகவில் ஸ்டாலின் தரப்பு தலையெடுக்க தொடங்கியதில் இருந்தே எல்லாமும் தலைகீழ்தான்.
சொந்த கட்சி நிர்வாகிகளை ஆலோசித்து முடிவெடுக்கும் போக்கு மாறிப் போய் சொந்தக்காரர்கள் சொல்வதே வேதவாக்கு என மாற்றிக் கொண்டது திமுக தலைமை. இதனடிப்படையில்தான் திமுகவில் உள்ளே நுழைந்தது ஓஎம்ஜி குரூப்.

ஸ்டாலின் பிரசாரம்
இன்றைய பிரசாந்த் கிஷோரிடம் பணிபுரிந்து வந்தவர்களில் ஒரு பிரிவினர்தான் இந்த ஓஎம்ஜி குரூப். இவர்கள்தான் ஸ்டாலினின் நமக்கு நாமே உள்ளிட்ட பிரசார வியூகங்களை வகுத்துக் கொடுத்தனர். ஊடகங்களில் எப்போதும் வந்தபடியே இருக்க வேண்டும் என்கிற சூத்திரத்தின் அடிப்படையில்தான் இந்த ஓஎம்ஜி குரூப் இயங்கி வந்தது.

திமுக- பிகே கூட்டணி
இந்த நிலையில்தான் பிரசாந்த் கிஷோரின் புகழ் வெளிச்சம் திமுகவையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பிரசாந்த் கிஷோரைப் பொறுத்தவரையில் ஜெயிக்கிற குதிரையில் சவாரி செய்வதில் ஆர்வம் உள்ளவர். அதனால் தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு இருக்கக் கூடிய திமுகவுக்கு கிரீன் சிக்னல் காட்டினர்.

திமுக மீது விமர்சனம்
இதில் கடுப்பாகிப் போன ஓஎம்ஜி குரூப்பின் சுனில் உள்ளிட்ட சிலர் ஒதுங்கிக் கொண்டனர். இதனையடுத்து பிரசாந்த் கிஷோரின் வருகையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளிப்படையாகவே அறிவித்தார். இன்றளவும் பிரசாந்த் கிஷோரை திமுக பயன்படுத்துவது சர்ச்சையாகி வருகிறது. இதற்கு திமுக தலைவர்கள் தொடர்ந்தும் விளக்கம் தந்தும் வருகின்றனர்.

பிகே மீது கோபம்
இந்நிலையில்தான் திமுகவிடம் இருந்து வெளியேறிய ஓஎம்ஜி குரூப் தலைமை நிர்வாகி, பிரசாந்த் கிஷோர் மீது ரொம்பவே குமுறலுடன் இருக்கிறாராம். அவரது இலக்கு பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதுதானாம். இதற்காக அதிமுகவிடமும் ரஜினிகாந்திடம் அந்த தலைமை நிர்வாகி பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தார். ஆனாலும் கைகொடுக்கவில்லை.

புலம்பும் திமுக
இதையடுத்து தமக்கு உதவியாக இருந்த ஒரு குழுவை திமுகவுக்குள் ஊடுருவ வைக்கவும் அந்த மாஜி தலைமை நிர்வாகி முயற்சித்திருக்கிறார். அதுவும் கைகூடவில்லை. பிரசாந்த் கிஷோரை வீழ்த்த திமுகவை தோற்க வைக்க வேண்டும்; இதற்காக யார் யார் சிக்குவார்கள் என தூண்டிலுடன் காத்திருக்கிறாராம் அந்த மாஜி நிர்வாகி. இருப்பினும் எங்கே தமது பெயர் வெளியே வந்துவிடுமோ என்பதற்காக காவிரிதேசத்தில் தாம் இருப்பதாகவும் காட்டிக் கொண்டிருக்கிறாராம் அவர். இதை கேள்விபட்ட நிலையில், நமக்குத்தான் இப்படியெல்லாம் குடைச்சல் வருகிறதே என புலம்புகிறதாம் திமுக தலைமை.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications