ஜன. 21ல் திமுக அவசர செயற்குழு.. கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்க திடீர் அழைப்பு
சென்னை: திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 21ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை இன்று இரவு, அக்கட்சி பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார்.
தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்காதது, காங்கிரஸ் தலைமை திடீரென திமுகவை குற்றம் சாட்டி போர்க்கொடி உயர்த்தியுள்ளது, மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், காங்கிரஸ் நெருக்கம் காட்டுவதாக வெளியாகியுள்ள தகவல்கள்.. போன்றவற்றுக்கு மத்தியில்தான், அவசர செயற்குழு கூட்டத்திற்கு, ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அவசர செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று, அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருப்பது, முன்னதாக நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் போன்றவை குறித்தும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications