தேர்தலே அறிவிக்கல.. அதுக்குள்ள ஆரம்பிச்சிருச்சு திமுக.. முதல் பாலே ஜெயக்குமாருக்கு எதிராத்தான்!
சென்னை: ஆரம்பித்து விட்டது திமுக தேர்தல் பரப்புரையை.. தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று தேர்தல் பரப்புரையை திமுக தொடங்கி உள்ளது. சென்னை இராயபுரத்தில் வீடுவீடாக திமுகவினர் வீடு வீடாக துண்டு பிரச்சாரம் வழங்கி பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளது. இதில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக சார்பில் ஒரு அணியும், சீமான், கமல்ஹாசன், டிடிவி தினகரன் ஆகியோர் தனியாகவும் தேர்தலை சந்திக்க உள்ளனர்.
திமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலினும், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமானும், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசனும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில் திமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் அக்கட்சியின் நிர்வாகிகளால் அதிமுக அரசை நிராகரிக்கிறோம் என்ற துண்டு பிரசுரம் வழங்க தொடங்கி உள்ளனர்.
சென்னை வடக்கு மாவட்டம் இராயபுரம் மேற்கு பகுதி திமுகவினர், மீனாட்சியம்மன் பேட்டையில் பகுதி செயலாளர் வா.பெ.சுரேஷ் தலைமையில் "அதிமுக அரசை நிராகரிக்கிறோம்" என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
திமுக சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தா.இளைய அருணா கலந்து கொண்டு வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை நிராகரித்து, திமுகவை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார். திமுக வீசியுள்ள முதல் பாலே அமைச்சர் ஜெயக்குமார் எம்எல்ஏவாக இராயபுரம் தொகுதி என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.