தொகுதி பங்கீட்டை முடித்த அதிமுக.. சைலண்ட் மோடில் முதல்வர் ஸ்டாலின்.. திமுகவில் நடப்பது என்ன?
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் அடுத்தடுத்து பல்வேறு பணிகளை முடித்து வரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி சைலண்ட் மோடில் இருந்து வருவது விவாதமாகி இருக்கிறது. திமுக தரப்பில் இன்னும் தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தைக் குழு கூட அமைக்கப்படவில்லை. முதல்வர் ஸ்டாலினின் இந்த தாமதத்திற்கான முடிவு என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்தே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார். ஏற்கனவே டெல்லி பயணித்து பாஜக உடனான தொகுதி பங்கீட்டை முடித்துவிட்ட சூழலில், அதற்கு முன்பாகவே பாமகவுடனான தொகுதி பங்கீட்டையும் முடித்தார்.

மறுபக்கம் அமமுகவை கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ள எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக பியூஷ் கோயலுக்கு விருந்து கொடுத்து வருகிறார். அதேபோல் மறுபக்கம் விஜய்யை தனிமைப்படுத்தும் பணிகளையும் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக கையாண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஆளுங்கட்சியான திமுக இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை கூட நடத்தவில்லை.
காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, முஸ்லீம் லீக், மநீம, தவாக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் தொடர்ந்து வருகின்றனர். இதுவரை எந்தக் கட்சியுடனும் திமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையையோ, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையையோ நடத்தவில்லை. காங்கிரஸ் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழு நேரில் வந்த போதும், ஸ்டாலின் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
திமுகவின் இந்த தாமதத்திற்கான காரணம் என்ன என்பது குறித்த விவாதம் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால் ஸ்டாலின் இதற்கு முன் நடைபெற்ற தேர்தலில் இதுபோன்ற தாமதங்களை செய்ததே கிடையாது. ஆனால் இம்முரை ஸ்டாலின் வேண்டுமென்றே தாமதம் செய்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.
ஏனென்றால் அதிமுகவின் தொகுதி பங்கீடு விவகாரங்கள் வெளியான பின், உடனடியாக திமுக தனது பணிகளை தொடங்கி 2 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், அவர்களுக்கு அதிமுக ஒரு வாய்ப்பாக இருந்துவிடக் கூடாது என்பதில் திமுக தலைமை தெளிவாக இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் சட்டசபைக் கூட்டத்தொடர் நிறைவடைந்த பின், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அப்போது திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications