பாதிப்பு இருந்தால் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்... தமிழிசை தடாலடி
சென்னை: பாதிப்பு இருந்தால் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையால், உண்மையில் எவ்வளவு பாதிப்பு என்பதை நீதிமன்றத்தில் தமிழக அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வரவேற்பு தெரிவித்தார். ஒரே கட்சியில் இருக்கும் தலைவர்கள் இருவேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு, அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மு.க. ஸ்டாலின், தினகரன், அன்புமணி, முத்தரசன், வாசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் அனுமதிக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications