ராஜ்பவனை விட்டு ஆளுநர் வெளியே வரக்கூடாது என நினைக்கிறார்களா? கடுகடுத்த வானதி சீனிவாசன்
சென்னை: வேற எதோ காரணத்திற்காக, கவர்னரை எதிர்ப்பதற்காக கவர்னர் திருப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசினார்.
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ரவியின் செயல்பாட்டுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கிற்கு பதிலளிக்க மத்திய உள்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கிடப்பில் வைத்து இருந்த 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. அவை கூடியதும், கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முதுபெரும் தலைவர் சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் வாசிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானமும் ஒரு மனதாக நிறைவேறியது.
முன்னதாக இந்த தீர்மானம் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது. பாஜக எம் எல் ஏக்கள், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். அப்போது வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு இப்படி செய்கிறார்கள்.
மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திர பதிவு கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, ஒவ்வொரு நாளும் சென்னையில் போராட்டம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள், நர்சுகள் போராட்டம்.. என பல பிரச்சினைகளை மக்கள் எல்லாம் இன்று பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.. இத்தனை பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்காக தான் இது போல செய்கிறார்கள்..
விவசாயி மீது போராட்டத்துக்காக குண்டாஸ் போடுகின்ற ஒரு அரசாங்கத்தை இங்கே தான் பார்க்க முடியும். இதனை முதல்வர் ரத்து செய்கிறார் என்றால், முதல்வருக்கு கீழே நிர்வாகம் எப்படி நடந்துகொண்டிருக்கிறது? இதையெல்லாம் மக்களிடம் இருந்து திசை திருப்புவதற்காக.. ஆந்திராவோ, கர்நாடகாவோ தெலுங்கானாவோ, மாநில அரசுடன் கன்சல்டேஷன் பிராசஸ் இருக்கிறது.
அது இங்கேயும் இருக்கிறது. இங்கேயும் அதனை எடுக்கவில்லை. இவர்கள் ஒரு இணக்கமான ரிலேசன்சிப்பை வைக்காமல் அதற்கு ஆளுநர் மீது குறை சொல்வது அர்த்தமே இல்லை. இது மட்டுமின்றி கவர்னர் பாடம் நடத்துகிறார்.. கவர்னர் பொதுவிழாவில் பேசுகிறார் என்று. என்ன நினைக்கிறாங்க?.. ஆளுநர் வெளியில் வரக்கூடாதா?.. கவர்னர் ராஜ்பவனை விட்டு வெளியில் வரக்கூடாது என்று நினைக்கிறார்களா?..
பெட்ரோல் குண்டு வீசுகின்ற கலாசாரத்தை எல்லாம் இவங்க தான் கொண்டு வராங்க.. கவர்னர் அரசாங்கத்தோடு கன்சல்ட் செய்து பண்ணக்கூடியவை எல்லாம் இதுவரை நல்லா தான் போயிக்கொண்டு இருந்தது. ஆனால் இவங்க வேற எதோ காரணத்திற்காக, கவர்னரை எதிர்ப்பதற்காக கவர்னர் திருப்பிய 10 மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறார்கள். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.
-
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா












Click it and Unblock the Notifications