Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று கோயம்பேடு, தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை போறீங்களா? போலீசார் முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை எம்.சி ரோடு மற்றும் கோயம்பேடு பகுதியில் நெரிசலைச் சமாளிக்க போக்குவரத்து போலீஸார் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ம் தேதி தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தற்போது கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் சென்னை மக்கள், ஒரு பக்கம் ஜவுளிக்கடைகள் புத்தாடைகள் வாங்க குவிந்து வருகிறார்கள். மறுபக்கம் சொந்த ஊருக்கு செல்லவும் தயாராகி வருகிறார்கள்..

Do you go to Koyambedu, TNagar, Purasaivakkam, Vannarpet today? Police Important announcement

தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை எம்சிரோடு ஆகிய இடங்களில தான் பெரும்பாலான மக்கள் சென்னையில் ஜவுளி எடுக்க செல்வார்கள், தென்சென்னையில் தியாகராய நகர் என்றால், வடசென்னையில் புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை தான பேமஸ். இதுதவிர தாம்பரம் பகுதியை பொறுத்தவரை குரோம்பேட்டை பகுதியும் வர்த்தக ரீதியாக அதீதமாக வளர்ந்து வருகிறது. இந்த பகுதிகளில் மக்கள் கூட்டம் கடந்த சில நாட்களாக கடல் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் தீபாவளிக்கு இரண்டு நாட்களே உள்ளதால் சிறப்பு ஏற்பாடுகளை போலீசார் சென்னையில் செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை எம்.சி ரோடு மற்றும் கோயம்பேடு போன்ற இடங்களில் மக்களுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக் கூடாது.

வாகன நெருக்கம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பூக்கடையிலிருந்த பட்டாசு கடைகள் அனைத்தும் தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டுள்ளன. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள புரசைவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் காலியான ஆட்டோக்கள் செல்வதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நெரிசல்குறைந்த இடத்துக்கு வந்துவிட்டு அங்கிருந்து ஆட்டோபயணத்தை மேற்கொள்ளலாம். மக்கள் நெருக்கம் அதிகமான பகுதிகளில் சரக்கு வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

தி.நகர் பகுதியில் சோமசுந்தரம் பூங்கா தியாகராயா ரோடு, தணிகாசலம் ரோடு, மகாலட்சுமி தெருவில் உள்ளநாச்சியார் சாலை மற்றும் மோதிலால் தெருவில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தம் போன்ற நிறுத்தங்கள் போக்குவரத்து காவல் துறையால் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், புரசைவாக்கத்தில் நாராயணகுரு சாலை மாநகராட்சி திடல், அழகப்பா ரோட்டில் ஈவார்ட்ஸ் பள்ளி, புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் ஈ.எல்.எம். பள்ளி திடல் போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு போக்குவரத்து போலீஸார் அறிவிப்பில் கூறியுள்னர்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+