வெறும் ரூ 1000 முதலீடு செய்ங்க.. லட்சாதிபதியாகுங்கள்.. அட்டகாசமான SIP திட்டங்கள்
சென்னை: வெறும் ரூ 1000 முதலீடு செய்து உங்களை பணக்காரனாக்கும் SIP திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு ஜான் வயிற்றுக்காக சம்பாதித்தது போல் தற்போது வருங்காலத்திற்கும் சேர்த்து சம்பாதித்து , அதில் கிடைக்கும் பணத்தை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பதற்காக மக்கள் வழிதேடி வருகிறார்கள்.

சிலர் போலி நிதி நிறுவனங்களை நம்பி மோசம் போகிறார்கள். இன்னும் சிலர் சரியான நம்பிக்கையான அரசு திட்டங்களில் முதலீடு செய்து பணத்தை சேமிக்கிறார்கள். அந்த வகையில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் நல்ல வருமானத்தை தரும்.
இந்த திட்டத்தில் குறைந்த பணத்தில் முதலீடு செய்யலாம். மாதம் ரூ 1000 எஸ்ஐபி திட்டத்தை தொடங்கலாம். இந்த முதலீடு நீண்ட காலம் நீடித்தால் நீங்கள் நிச்சயம் பணக்ககாரர் ஆகலாம். ரூ 1000 மாதந்தோறும் 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள, 20 ஆண்டுகள் முதலீடு செய்தால் என்ன நிதி கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மியூச்சுவல் பண்ட் மூலம் ரூ 1000 மாதம் எஸ்ஐபியில் செலுத்தினால் சுமார் 2.25 லட்சம் நிதி தயாராக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீதம் அதிகரித்து முதலீடு செய்தால் 10 ஆண்டுகளில் சுமார் ரூ 5 லட்சம் நிதி தயாராகிவிடும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 12 சதவீதம் வருமான தருகிறது. இந்த 1000 திட்டத்தில் மாதம் நீங்கள் 20 சதவீதத்தை அதிகரித்துக் கொண்டே வந்தால் 15 ஆண்டுகளில் 15 லட்சம் நிதி கிடைக்கும்.
ஒரு வேளை ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீதம் முதலீடு அதிகரித்து செய்தால் 20 ஆண்டுகளில் சுமார் 45 லட்சம் ரூபாய் கிடைக்கும். இது போன்று முதலீடு செய்யும் திட்டங்கள் நிறைய இருக்கின்றன. அதில் நீங்கள் பணத்தை முதலீடு செய்து பயன்பெறலாம். எஸ்ஐபி என்றால் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்பதாகும்.
இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக முதலீடு செய்வதற்கு பதிலாக மாதந்தோறும் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை நிலையான ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். இதில் முதலீடு செய்து வருங்காலத்தை வசந்த காலமாக மாற்றிக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications