மாலை உருவாகிறது மாண்டஸ் புயல்.. சென்னைக்கு அருகே எங்கே இருக்கிறது தெரியுமா?
சென்னை: வங்கக் கடலில் இன்று மாலை உருவாகவுள்ள மாண்டஸ் புயல் எங்கே இருக்கிறது தெரியுமா?
வங்கக் கடலில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவானது. இது நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்தது. இந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்படுகிறது. இதை ஐக்கிய அரபு நாடுகள் வைத்துள்ளது.

பெயர் காரணம் என்ன
உலக வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக இருக்கும் அப்துல்லா அல் மாண்டஸ் என்பவர் ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்தவர். அதனால் இந்த மாண்டஸ் என்ற பெயரை அந்த நாடு பரிந்துரைத்தது. இந்த புயலால் நாளை முதலே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 9 அதி கனமழை
இந்த புயலால் வரும் டிசம்பர் 9ஆம் தேதி தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பேரிடர் மீட்பு குழுவினர் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

புயல் எச்சரிக்கை கூண்டு
நாகை, புதுவை, காரைக்கால், சென்னை உள்ளிட்ட இடங்களில் முதலாம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மாண்டஸ்
இந்த நிலையில் இந்த மாண்டஸ் நேற்று நிலவரப்படி புதுவையின் வடக்கு பகுதியில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த காற்றழுத்தம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே சென்னை அருகே வருகிறது. சரியாக சென்னையிலிருந்து 830 கி.மீ. தென் கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

12 கி.மீ. வேகம்
இது மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரும் நிலையில் இன்று மாலை புயல் உருவாகிறது. எனவே இன்று மாலை உருவாகும் புயல் எங்கு கரையை கடக்கும், எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தெரியவில்லை. எனினும் தமிழக அரசும் புதுவை அரசும் தயார் நிலையில் உள்ளனர்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications