சித்ராவின் செல்போன் ஸ்கிரீனிலும்.. வாட்ஸ் ஆப் DP-யிலும் என்ன புகைப்படம் வைத்திருந்தார் தெரியுமா?
சென்னை: சித்ராவின் வாட்ஸ்ஆப் டிஸ்பிளே பிக்சரில் இருந்த புகைப்படம் எது தெரியுமா? நண்பர்கள் வெளியிட்டு வேதனை தெரிவித்தனர்.
முல்லையாக மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட சித்ரா கடந்த 9-ஆம் தேதி காலை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பு தற்கொலை என போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் மூலம் போலீஸார் உறுதி செய்தனர்.
சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் போலீஸார் 4ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சித்ராவின் மாமனாரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளார்கள்.
"உளறும்" ஹேம்நாத்.. 4வது நாளாக விசாரணை.. சித்ரா மாமனாரிடம் போலீஸ் கிடுக்கிபிடி.. வழக்கு பாய்கிறதா!
நண்பர்கள்
இந்த நிலையில் சித்ராவின் இறப்பை தாங்க முடியாத அவருடன் நடித்தவர்கள் கண்ணீர் மல்க சில விஷயங்களை பதிவு செய்து வருகிறார்கள். அதில் ஹேம்நாத்தை சித்ரா மிகவும் நேசித்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஹேம்நாத்தான் அவரை டார்ச்சர் செய்து படப்பிடிப்பு தளங்களுக்கெல்லாம் வந்து தொல்லை கொடுத்தார்.
குறுகிய காலம்
சித்ரா தன் காதல் கணவருடன் வாழ்வதற்காக திருவான்மியூரில் ஒரு அபார்ட்மென்ட் வாங்கியிருந்தார். அங்கிருந்துதான் படப்பிடிப்புகளுக்கு வந்து கொண்டிருந்தார். குறுகிய காலத்தில் நிறைய சீரியல் வாய்ப்புகள், விளம்பரங்கள், ரியாலிட்டி ஷோக்கள் உள்ளிட்டவை கிடைத்ததால் நல்ல வருமானம் சித்ராவுக்கு கிடைத்தது.
வாட்ஸ் ஆப்
தனது திருமணத்திற்கு பிறகு அவரது பெற்றோருக்கு வருமானம் கிடைப்பதற்கான அனைத்து வேலைகளையும் சித்ரா செய்திருந்தாராம். தனது செல்போன் வாட்ஸ் ஆப்பில் மொபைல் டிஸ்பிளேயில் சித்ரா எந்த படத்தை வைத்திருந்தார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
நண்பர்கள்
அதாவது சித்ரா- ஹேம்நாத் திருமண நிச்சயதார்த்தத்தின்போது ஹேம்நாத் சித்ராவின் கன்னத்தை செல்லமாக கிள்ளுவது போன்றும் அதற்கு சித்ரா வெட்கப்பட்டு சிரிப்பது போன்றும் ஒரு புகைப்படத்தைதான் அவர் டிபியாக வைத்திருந்தார் என அவரது நண்பர்கள் காண்பித்து வேதனை தெரிவிக்கிறார்கள்.