இல்லத்தரசிகள் ஷாக்.. 8 மாதங்களுக்கு பிறகு உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை! சென்னையில் விலை இதுதான்
கடைசியாக கடந்த ஜூலை மாதம் சிலிண்டர் விலை அதிகரித்தது
சென்னை: வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்திருக்கிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் கேஸ் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை 6ம் தேதி முதல் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில், எட்டு மாதங்களுக்கு பின்னர் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மறுபுறம் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் ரூ.350 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1,068.50லிருந்து ரூ.1,118.50க்கு ஆக அதிகரித்துள்ளது. அதேபோல வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை பொறுத்த அளவில்
ரூ.1,917 லிருந்து ரூ.2,268 ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications