மாணவர்களின் கைகளில் சாதியை குறிக்கும் பகீர் கலர் கயிறுகள்.. பள்ளி கல்வித்துறை சூப்பர் உத்தரவு
சென்னை: பள்ளி மாணவர்கள் கைகளில் சாதிய அடையாளங்களை குறிக்கும் வண்ண கயிறுகளை கட்ட அனுமதிக்க கூடாது என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவர்களிடையே சாதியை குறிக்கும் வகையில் வண்ண வண்ண நிறங்களில் கயிறு அணியும் பழக்கம் காணப்படுகிறது. இந்த கயிறினை வைத்து எந்த ஜாதியைச் சேர்ந்த மாணவன் என்பதை எளிதாக மற்ற மாணவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். இதன் மூலம் இரு பிரிவான மாணவர்கள் பிரிந்து சாதி ரீதியான வன்ம தாக்குதல்களை அடிக்கடி நிகழ்த்தியும் வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 2018ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவு அதிகாரிகள் பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்கள். அதில் தமிழ்நாட்டில் ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் விதவிதமான வண்ணங்களில் கயிறுகளை அணிந்து செல்கின்றனர். குறிப்பாக மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் காவி ஆகிய நிறங்களில் கயிறுகள் கட்டியிருக்கின்றனர். இந்தக் கயிறுகள் மூலம் மாணவர்களின் ஜாதிகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இந்த கயிறு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி, அவ்வாறு நடக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி மாணவர்கள் கைகளில் சாதிய அடையாளங்களை குறிக்கும் கயிறுகளை கட்ட அனுமதிக்க கூடாது என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, அவ்வாறு நடக்கும் பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications